சென்னை, ஜூன் 3- தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் குழு ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் மற்றும் புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறை யில் விவரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் வெள்ளிக் கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சனிக்கிழமை விமானம் மூலம் ஒடிசா சென்றடைந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திட வும் மேலும், மீட்பு பணிகளில் உடனி ருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற் கும் தேவையான உதவிகளை செய்யவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் விமானம் மூலம் ஒடிசா சென்றடைந்தனர். அங்கிருந்து அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகி யோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்திற்கு அரசு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். மற்றொரு குழு வான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ள னர். அமைச்சர்கள் கொண்ட குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், மேற்கொள்ளப் பட்டு வரும் நிவாரணப் பணிகளை யும் மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்களின் விவரங்கள் குறித்து உடனுக்குடன் தமிழக அரசிற்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படை யில் தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.