states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தேரோட்ட வீதிகளில் புதைவட மின்கம்பி

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அமைச்சர்களின் பதிலும் வருமாறு: மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்பு கள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்

உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்த குழு

நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு: தற்போது 90-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை உருவாக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில்உள்ளது. எந்தெந்த ஊராட்சிகளை பேரூ ராட்சிகளுடன் இணைக்கலாம், பேரூராட்சி களை நகராட்சிகளுடன் இணைக்க லாம்,மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊராட்சிகளை தவிர்த்து பேரூராட்சிகளிலும் 100 நாள்  வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தும் வகையில் ரூ.100 கோடிஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 பேரூராட்சிகள், 3 நக ராட்சிபகுதிகளில் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

உயர்மட்ட பாலங்கள்

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரைக்கும் மேல்மட்ட சாலை  அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்ய ப்பட்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது. அதுபோல் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மேல்மட்ட சாலை அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டது. 

சாலைகள் விரிவாக்கம்

சென்னை குரேம்பேட்டை-திருநீர் மலை சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். தென்காசியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெல்லை-தென்காசிச் சாலையில் புறவழிச் சாலை அமைக்கவும் இரு வழிச் சாலை நான்கு வழிச் சாலையாகவும் விரிவுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், திருத்துறைப்பூண்டியிலும் புறவழிச் சாலை அமைத்து கொடுக்கப்படும்.