states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பஞ்சாப்பில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் திங்களன்று அதிகாலை 3.42 மணியளவில் 4.1 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அமிர்தசரஸ் நகரில் இருந்து  145 கிலோ மீட்டர் வடமேற்கில் சுமார் 120 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவி யியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஞாயிறன்று இரவு தில்லி, உபி., உத்தர கண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. தில்லி என்சிஆர் பகுதியில் இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் காசியாபாத், நொய்டா, பிஜ்னோர், மொராதாபாத் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ், அல்மோரா, சாமோலி, ராம்நகர் மற்றும் உத்தரகாசி ஆகிய இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.

அகதிகளை நாடு கடத்தியே ஆக வேண்டும்: அமித்ஷா உத்தரவு!

“ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டவிரோத புலம்பெயர்வோர் 100 பேரை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்து, பின்பு அவர்களை நாடு கடத்துங்கள். ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்வோர் என்பதற்காக அண்டை நாடுகள் அவர்களை ஏற்க மறுத்த போதிலும் தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொள்ளுங்கள்” என்று உளவுத் துறை அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல சீக்கியர்கள், கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஆளாவது அதிகரிப்பது பற்றியும் கண்காணிக்குமாறு உளவுத்துறை அதிகாரிகளுக்கு அமித்ஷா அண்மையில் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் மதவெறியர்களும், கோழைகளுமே உள்ளனர்!

“சசி தரூருக்கு வாக்களித்து தைரியத்தை வெளிப்படுத்திய 1,000 பிரதிநிதிகள் மட்டுமே காங்கி ரசில் உள்ள ஒரே ஜனநாயக மக்கள். அவர்கள் விரைவில் பாஜக-வில் இணைவார்கள்” என  அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியிருந்தார். இந்நிலையில், சசி தரூருக்கு  வாக்களித்தவர்களில் ஒருவரான சல்மான் அனீஸ் சோஸ் பதிலளித்துள்ளார். அதில், “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கு வாக்களித்த 1,072 பிரதிநிதிகளில் நானும் ஒருவன். நாங்கள் தோற்றோம்தான்.. ஆனால் உள்கட்சி ஜனநாயகம் வென்றது. நாட்டில் பாஜக மட்டுமே எஞ்சியிருந்தாலும் நான் அதில் சேர மாட்டேன். பாஜகவில் பெரும்பாலும் மதவெறியர்கள், கோழைகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளே உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியை விட பாஜக ஆட்சி மோசம்: சஞ்சய் ராவத்

“ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை. அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அரசி யல் விஷமாகிவிட்டது. இதுபோல ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இல்லை. தற்போது  தில்லி ஆட்சியாளர்கள் அவர்கள் விரும்புவதை கேட்க விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி செயல்படாதவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். தங்களின் எதிரிகள் உயிரோடு இருக்கக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் அழிக்க விரும்புவதால் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளது. நேருக்கு நேராக உண்மையை பேசுபவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் மாண்பைக் குறைக்கின்றனர்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

‘தடை’ விதித்த மருந்துகளை தயாரிக்க ராம்தேவிற்கு அனுமதி

கார்ப்பரேட் சாமியார் ராம்தேவின் ‘திவ்யா பார்மசி’ தயாரிக்கும்  நீரிழிவு, ரத்த அழுத்தம், கண்  கோளாறு, தைராய்டு, அதிக கொழுப்பு நோய்களுக்கான ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் விதிமீறல் இருப்பதாக கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் கே.வி. பாபு புகார் அளித்திருந்தார். அதன்பேரில் இந்த 5 மருந்துகளுக்கும் யுனானி உரிம ஆணையம் கடந்த 9-ஆம் தேதி தடை விதித்திருந்தது. இந்நிலையில், அந்தத் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட நிறு வனத்திடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் தடை உத்தரவு அவசர கதி யில் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே முந்தைய உத்தரவு திரும்பப் பெறப்படுவதாகவும், தடை விதிக்கப்பட்ட ஐந்து மருந்துகளையும் ராம்தேவின் நிறுவனம் மீண்டும் தயாரிக்கலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ஆசை எதுவும் எனக்கு இல்லை!

“நான் ஏன் தேர்தலில்  போட்டியிட வேண்டும்? அப்படியொரு ஆசை எனக்கு இல்லை. ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் என்னைத் துன்புறுத்த விரும்புகின்றனர். என்னைக்  கொஞ்சம் அரசியல் புத்திசாலித்தனம் உள்ள வர்த்தகர் என்று கூறும் ஐக்கிய ஜனதாதளம் தலை வர்கள், நிதிஷ் குமாரின் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை அவர்களது தலைவரிடம் கேட்க வேண்டும்” என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ‘ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவோம்’ என்ற வாக்குறுதியை நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றினால் நான் எனது பிரச்சாரத்தை (ஜன் சூரஜ் யாத்திரை) கைவிடுவேன்” என்றும் கிஷோர் குறிப் பிட்டுள்ளார்.

சபரிமலைக்கு  சிறப்பு பேருந்துகள்

சென்னை, நவ. 14- சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4  மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு 1,090 ரூபாயும், சிறியவர்களுக்கு 545 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், சென்னை யில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளையும் அவர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று போக்கு வரத்து துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சாத்தனூர்  அணை திறப்பு:  எச்சரிக்கை

திருவண்ணாமலை, நவ.14-  திருவண்ணாமலை மாவட்டம் சாத்த னூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள் ளதால், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பது அதிகரித்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால் 119 அடி  உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளன. எனவே, அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித் துள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத் துறை அதிகாரி கள் விடுத்துள்ளனர். ஆற்றில் குளிக் கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் மற்றும் செல்பி எடுக்க வும் வேண்டாம் என அறிவுறுத்தி உள்ள னர். 

கள்ளக்குறிச்சி  பள்ளி கலவரம்: தமிழக அரசு  பதிலளிக்க உத்தரவு

சென்னை, நவ.14- கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து  அவரது மனைவி தாக்கல் செய்த மனு வுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கு ம்படி, தமிழக அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தையொட்டி, கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளியில் கலவரம் வெடித் தது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த வாகனங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. பொருட்கள் சேதப்படுத் தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக உயர் நீதி மன்றம் நியமித்த சிறப்பு புலன் விசார ணைக்குழு, பலரை கைது செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறை யிலடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர், கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உத்தர விட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது கணவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தமிழ்பிரியா சென்னை உயர்  நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், “தனது கணவர் எந்த கலவரத்தையும் தூண்டாத நிலை யில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளது. ஜாமீன் கோரி தாக்கல் செய்யப் பட்டுள்ள மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமீனில் விடுதலையாவதை தடுக்கும் வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு நகல் ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப் பட்டுள்ளது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லை” என்று மனு வில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக உள்துறை செய லாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 4  வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை ஒப்படைக்க உத்தரவு

சென்னை, நவ.14- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிமன்றம், அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சிபிசிஐடி விசாரணை அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தார். அதில் 214 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கூட்டுறவுத் துறையை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: முதல்வர்

திருவனந்தபுரம், நவ.14- கூட்டுறவு துறையை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கூட்டுறவு துறைக்குள் அத்துமீறி நுழையும் முயற்சியை தடுக்க வேண்டும்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசுடன் கூட்டுறவுத் துறைக்கும் பங்கு உள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.கேரளாவில் வங்கி கலாச்சாரத்தை ஊக்குவித்தது கூட்டுறவு சங்கங்களும் வங்கிகளுமாகும். நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக மாற்று வழிகளையும் ஒன்றிய அரசு சிதைக்கிறது.இதன் ஒரு பகுதியாக கூட்டுறவுத் துறையில் அத்துமீறல் உள்ளது.ஒன்றிய அரசின் பல நடவடிக்கைகள் கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாக உள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

பெண்களுக்கு கூடுதல் தடைகள்: தலிபானின் ஒடுக்குமுறை தொடர்கிறது

காபூல், நவ.14- உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பொதுக் குளியலறைக் கூடங்களுக்கு பெண்கள் செல்வதற்கு ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள் தடைவிதித்திருக்கிறார்கள். பொது இடங்களைப் பயன்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஏற்கனவே நிறையத் தடைகள் இருக்கின்றன. கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் பொது இடங்களுக்கு வருவதிலிருந்து தடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான பெண் அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். ஆண் துணையின்றி பெண்கள் பயணம் மேற்கொள்ள முடியாது. வீடுகளை விட்டு வெளியே வருகையில் உடலையும், தலையையும் மறைத்துக் கொள்ளும் புர்கா மற்றும் ஹிஜாப் போன்ற ஆடைகளுடன்தான் இருக்க வேண்டும். ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன. தற்போது உடற்பயிற்சிக் கூடங்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் ஆண்களாக இருப்பதாலும், பெரும்பாலான பயிற்சிக் கூடங்கள் இருபாலருக்குமானதாக இருப்பதாலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அமைச்சரான முகம்மது ஆகிப் சாதிக் முகாஜிர் கூறியுள்ளார். அதே போன்று, பொதுக் குளியலறைகளுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்றும், அவரவர் வீடுகளில் இந்த வசதி இருப்பதால், பொதுக் குளியலறைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இந்தப் புதிய தடைகளுக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன. பெண்களுக்காக என்று பெண் பயிற்சியாளர்களோடு இருக்கும் உடற்பயிற்சிக் கூடங்களைக் கூட மூடி விட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

உலகச் செய்திகள்

சூடானில் மீண்டும் மக்களாட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள். ராணுவ ஆட்சியை விலகக் கோரி வாரத்திற்கு ஒருநாள் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, அந்நிய சக்திகள் சூடானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது சூடானில் உள்ள ஐ.நா. சபையின் பிரதிநிதி ராணுவ ஆட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பனாமாவில் 25 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். 11 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்த வறுமைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொன்னாலும், ஆண்டுக்கு 0.1 விழுக்காடுதான் குறைந்து வருகிறது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடுமையான வறுமையால் வாடுகிறவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் மேல் என்பது பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான இயற்கை வளங்களை இஸ்ரேல் சுரண்டக்கூடாது என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகளும் விழுந்தன. பத்து நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இயற்கை வளங்கள் மீதான பாலஸ்தீனத்தின் இறையாண்மையை ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது என்று தீர்மானத்திற்கு நன்றி சொல்லி பாலஸ்தீன நிர்வாகம் பாராட்டியுள்ளது.