சென்னை, ஆக,13- “ஊட்டச்சத்து குறைபாட்டில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்ப வில்லை” என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்வேறு மாவட்ட ங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக் குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடு கையில் நாம் நல்ல நிலையில் இருக்கி றோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங் கப்பட்ட திட்டம்தான் #ஊட்டச்சத்தை_உறுதிசெய்!” எனப் பதிவிட்டுள்ளார்.ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை ஒன்றி ணைந்து, 6 வயதுக்கு குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச் சத்துக் குறைபாடுடைய குழந்தை களுக்கு சிறப்பு மருத்துவப் பரி சோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித் தறிந்து, குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 6 வயது வரை யுள்ள மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 9.3 லட்சம் குழந்தைகள் மருத்துவப் பரி சோதனை செய்யப்பட்டார்கள். அதில் 43,200 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை உள்பட வெவ்வேறு மருத் துவ சிகிச்சைகள் மாவட்ட ஆரம்ப சிகிச்சை மையங்களில் அளிக்கப் பட்டது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பிறவியி லேயே கண்டறியப்பட்ட இதய நோய், பிறவியிலேயே கண்டறியப் பட்ட மூளை வளா்ச்சி குறைபாடு, பிறவி பார்வை குறைபாடு, பிறவி காது கேளாமை, பிறவி கால் ஊனம் போன்ற பிறவி குறைபாடுகளை உடைய 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது அவர்கள் நலமாக உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.