சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்
சென்னை, டிச.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட முன்னோடித் தலைவரான தோழர் வி.வி.கிரி மறை வுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தி வரு மாறு: நீலகிரி மாவட்டத்தின் முன்னோடித் தலைவர் களில் ஒருவரான வி.வி. கிரி (வெள்ளிங்கிரி) உடல் நலக் குறைவால் கோவையில் காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலி யையும் தெரிவித்துக் கொள் கிறது.
தோழர் கிரி உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையின் தொழிலாளியாக தனது தொழிற்சங்கப் பணியை துவக்கியவர். அவர் அங்கு பணியாற்றியபோது அத் தொழிற்சாலையில் சிஐ டியு சங்கத்தை உருவாக்கிய தில் அவருக்கு முக்கிய பங்குண்டு. அத்தொழிற் சாலையை பாதுகாப்ப தற்கும், தொழிலாளர்களின் உரிமைகளை மீட்பதற்கு மான எண்ணற்ற போராட் டங்களை தலைமையேற்று நடத்தியவர். அத்தொழிற் சாலையில் அப்போது நடை பெற்று வந்த ஊழல்கள் மற் றும் முறைகேட்டை அம்பலப் படுத்தியதற்காக தொழிற் சாலை நிர்வாகம் பொய்யா னதொரு குற்றச்சாட்டை முன்வைத்து அவரை பணி யிலிருந்து டிஸ்மிஸ் செய் தது. அவரை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையோடு எண்ணற்ற போராட்டங்கள் நடந்ததோடு தொழிற்சங்கம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில் தோழர் கிரியின் தரப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத் தான தலைவர் பி.ராமமூர்த்தி அவர்களே நேரடியாக ஆஜ ரானார்.
வழக்கில் வெற்றி பெற்றா லும் கூட அவர் பணியை உதறிவிட்டு நீலகிரி மாவட்ட தொழிலாளர்களை செங் கொடி இயக்கத்திற்கு பின் னால் அணிதிரட்ட வேண்டும் எனும் லட்சியத்தோடு முழு நேர ஊழியராக பணியாற்ற துவங்கினார். உதகையில் உள்ள ராலீஸ் இந்தியா தொழிற்சாலை, உதகை நக ராட்சி ஊழியர்கள் சங்கம், தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள், தேயிலை கூட்டு றவு தொழிற்சாலை தொழி லாளர்கள் என மாவட்டத்தின் அனைத்துத்தரப்பு தொழிலா ளர்களையும் செங்கொடிக்கு பின்னால் அணிதிரட்டுவதில் அவர் மிக முக்கிய பங்காற் றினார். சிஐடியுவின் மாவட்டச் செயலாளராகவும், மாநி லக்குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினராக வும், ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சங்க தலைவராக வும் என பல்வேறு பொறுப்பு களை ஏற்றுக் கொண்டு திறம் பட பணியாற்றியவர். தோழர் கிரியின் மறைவு நீலகிரி மாவட்ட தோழர்களுக்கும், செங்கொடி இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். தோழர் கிரி மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் வசந்தா, மகன் கள் ரமேஷ்பாபு, ரவி, முரளி, சரவணன் ஆகியோருக்கும், நீலகிரி மாவட்டத் தோழர் களுக்கும் மாநில செயற்குழு தனது ஆறுதலையும், வருத் தத்தையும் தெரிவித்துக் கொள் கிறது.
தலைவர்கள் இரங்கல்
அவரது மறைவிற்கு கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மூத்த தலை வர் டி.கே.ரங்கராஜன், மத்தி யக்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோரும் இரங் கல் தெரிவித்துள்ளனர்.