states

மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்லும் ஆண்டாக அமையட்டும்!

சென்னை, டிச.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு: அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ஆம் ஆண்டின் படிப்பினைகளை அனுபவ உரமாக்கி பூத்துவரும் புத்தாண்டை நம்பிக்கை யோடு வரவேற்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் சமத்துவ உல கைப் படைப்பதற்கான போராட்டங்கள் மேலும் வலிமையோடு நடக்கும் ஆண் டாக இந்த ஆண்டு அமையட்டும்.  உலகம் முழுவதும் வல்லரசு நாடு களின் பிடி இறுகி வந்தபோதும், அதை எதிர்த்த மக்கள் போராட்டங்களும் எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. நவீன  தாராளமயமாக்கல் கொள்கையால் பெரும்பகுதி உழைக்  கும் மக்கள் கொடூரமாக சுரண்டப்படு கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாப வெறிக்கு உலக மக்க ளின் வாழ்க்கை பணயமாக வைக்கப்படு கிறது. லத்தீன்-அமெரிக்க நாடுகளில் சோசலிச மற்றும் இடதுசாரி சக்தி கள் ஆட்சிக்கு வந்திருப்பது நம்பிக்கை யளிக்கிறது.

முதலாளித்துவத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் வெற்றியில் தான் இந்தப் பூவுலகின் அமைதியும் மக்க ளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, அரசியல் சாசன விழுமியங் களான மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி என அனைத்தையும் அரித்து தின்று கொண்டிருக்கிறது. சுதந்திர  இந்தியாவின் அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சனா தனத்தின் சாரமான மனுஸ்மிருதியை வைக்கத் துடிக்கிறது. ஒன்றிய பாஜக அரசு, அரசியல் சட்டத்தால்  உருவாக்கப்பட்ட நிறுவனங் களை, நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஒன்றிய புல னாய்வு அமைப்புகள் என அனைத்து 

அமைப்புகளையும் சீர்குலைத்து வருகிறது. அரசியல் சட்டத்தை பாது காப்பதற்கான போராட்டத்தை பல மடங்கு வீரியத்தோடு நடத்தும் ஆண் டாக இந்தாண்டு அமையட்டும். மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் ஆளுநர்கள், ஒன்றிய அரசின் ஏவலாட்களாக செயல்படுகிறார்கள். இந்த அத்துமீறல் தடுத்து நிறுத்தப்பட் டால்தான் கூட்டாட்சியை பாதுகாக்க முடியும். தமிழ் உள்ளிட்ட மொழி களைப் புறக்கணித்து இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை திணிக்  கத் துடிப்பது இந்திய ஒருமைப்பாட் டையே அர்த்தமிழக்கச் செய்துவிடும். அனைத்து மொழிகளும் பன்முகப் பண் பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவிலேயே முன்னுதாரண மான அரசாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு பல்வேறு துறைகளில் தடம் பதித்து முன்னேறி வருகிறது. தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்திற் குப் பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்  டங்கள் திமுக அரசால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தமி ழக முதல்வர் தொடர்ந்து குரல்  கொடுத்து வருகிறார். தமிழகத்திற் கென்று தனி கல்விக்கொள்கை உட்பட பல்வேறு நல்ல விசயங்கள் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன.'

அதேசமயம், சாதிய ஒடுக்குமுறை கள், பட்டியலின மக்கள் மீதான தாக்கு தல்கள், தீண்டாமைக் கொடுமைகளின் தீவிரத் தன்மை அதிகரித்துள்ளன. இறையூரில் பட்டியலின மக்கள் பயன்  படுத்தும் குடிநீரில் மலம் கலந்த கொடுமை தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது. இவற்றிற்கு எதிராக வலு வான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றிய - மாநில அரசு களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது. இதற்கான விழிப்புணர்வை யும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து வகையான சுரண்டல்களிலி ருந்தும் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை தொடர வேண்டியுள் ளது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெறுப்பு அரசியல், ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரத்தால் மோசமாக முன்னெடுக் கப்படுகிறது. நம் நாடு சுதந்திரதின பவள விழாவை கொண்டாடி முடித்துள்ள நிலையில் விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலால் உருவான மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை, இறையாண்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றை  இந்திய மக்கள் பாதுகாப்பதற்கு முன் னேறிச் செல்லும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமையட்டும் என நம்பிக்கை யோடு வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.