states

முத்து இல்ல அனுபவ உரிமை அறக்கட்டளை தலைவரிடம் ஒப்படைப்பு

தருமபுரி, ஜூன் 8- தருமபுரி நான்கு ரோடு அருகே  உள்ள முத்து இல்லம் அனுபவ உரி மையை, முத்து இல்ல அறக்கட் டளை தலைவர் வி.மாதனிடம் தரு மபுரி கோட்டாட்சியர் கீதா ராணி வழங்கினார். தருமபுரியில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் வட்டார வளர்ச்சி  காலனியில் கதவு எண்: 392 முத்து இல்லத்தில் செயல்பட்டு வரும் முத்து நினைவு அறக்கட்டளை அலு வலகத்தில், கடந்த மார்ச் 13 ஆம்  தேதியன்று இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம் தலைமையி லான சுமார் 30 பேர் அத்துமீறி நுழை ந்து, அலுவலகத்தில் அக்கிரமப்பிர வேசம் செய்து அலுவலக பொருட் கள் மற்றும் ஆவணங்களை எடுத் துச் சென்றுவிட்டனர். மேற்குறிப்பிட்ட நபர்களின் செயல் குறித்து தருமபுரி நகர காவல்  நிலையத்தில் முத்து இல்ல அறக்கட்டளைதலைவர் வி‌.மாதன் பெயரில் புகாரளிக்கப்பட்டது. இத னைத்தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, தருமபுரி வட்டாட்சியர் முத்து  இல்ல அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். இதுதொடர்பாக, தருமபுரி உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய்க்கோட்ட அலுவலரின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-ன் கீழான விசாரணைக்கு வரு வாய் கோட்டாட்சியர் கீதா ராணி  உத்தரவிட்டார்.

வருவாய் கோட் டாட்சியர் இரு தரப்புக்கும் சம்மன்  பிறப்பித்து கடந்த மார்ச் 15, 17 ஆகிய  தேதிகளில் விசாரணை நடைபெற் றது. விசாரணையின் போது முத்து நினைவு அறக்கட்டளை சார்பில், முத்து இல்லம் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்ற ஆவணங்க ளையும், அறக்கட்டளை அனுப வத்திலிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களையும், அதில் செயல் பட்டு வந்த பொதுநல அமைப்புகள் மற்றும் அறக்கட்டளையின் பணி கள் நடைபெற்றதற்கான ஆதாரங்க ளையும் அறக்கட்டளையின் தரப்பி லிருந்து சமர்ப்பிக்கப்பட்டது.  விசாரணையின் முடிவில், முத்து இல்லம் மார்ச் 13 ஆம் தேதி யன்று வரை முத்து நினைவு அறக் கட்டளையின் வசம் இருந்து வந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முத்து இல்ல கட்டடத்தில் வைக்கப்பட்ட சீலினை  அகற்றி, அறக்கட்டளை வசம் ஒப்ப டைக்க வட்டாட்சியருக்கு அனுமதி அளித்து தருமபுரி வருவாய் கோட்  டாட்சியர் கீதா ராணி ஆணையிட் டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று தருமபுரி வட்டாட்சியர், காவல் துறை பாது காப்புடன் முத்து இல்லம் கட்ட டத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றி,  அறக்கட்டளைத் தலைவர் வி.மாத னிடம் அலுவலக சாவியை ஒப்ப டைத்தார்.  அறக்கட்டளையின் செயல்பாட்  டுக்கு கடந்த மூன்று மாதங்களாக  இடையூறு ஏற்பட்டது. தற்பொழுது  வருவாய் கோட்டாட்சியர் அலுவல ரின் ஆணையைத் தொடர்ந்து முத்து இல்லத்தில் அறக்கட்டளையின் ஆக்கப்பூர்வமான பணிகள் தொட ர்ந்து நடைபெறும் என அறக்கட் டளை தலைவர் வி.மாதன் தெரி வித்துள்ளார்.