states

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 1 லட்சம் இந்தியர்கள் : குஜராத்திகளே அதிகம்

புதுதில்லி, நவ. 3 -  அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை ஆவணங்கள் இன்றி, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்றதாக 96 ஆயிரத்து 917 இந்தியர்களை அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநி லத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. 2019-2020 ஆண்டில் 19 ஆயிரத்து 883 இந்தியர்களே சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற தாகக் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 96 ஆயி ரத்தைத் தாண்டியுள்ளதாக கூறி யுள்ளது. இந்த 96,917 இந்தியர்களில் 30 ஆயிரத்து 010 பேர் கனடா எல்லை வழி யாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைய முயன்றுள்ளனர். 41  ஆயிரத்து 770 பேர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப் பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அமெரிக்காவிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அதிகாரிகள் கூறு கின்றனர். 10 பேர் நுழைய முயன்றால், அதில் ஒருவர் மட்டும் பிடிபடுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்ற னர். கடந்த 2022 நிதியாண்டில் (அக்டோபர் - செப்டம்பர்) மட்டும் மொத்தம் 84 ஆயிரம் இந்திய இளை ஞர்கள் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முன்றுள்ளனர். கைதானவர்களை விசாரித்ததில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காரணமாகத் தெரி வித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறி யுள்ளனர். இப்படி சட்டவிரோதமாக முயல்வோரில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த வர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரி களால் கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளனர். குழந்தைகள், குடும்ப  உறுப்பினர்களுடன் வரும் குழந்தை கள், குழந்தைகள் இல்லாமல் வரும் குடும்பங்கள், முதியவர்கள் என்று கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாக இருக்கிறார்கள். அதன்படி சுமார் 730 குழந்தைகளும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.