states

வகுப்புவாத சக்திகளை நிராகரித்த கர்நாடக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை, மே 13- வகுப்புவாத சக்திகளை நிரா கரித்த கர்நாடக மக்களுக்கு இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்து வந்த பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் உள் ளிட்ட பாஜக தலைவர்கள் வரம்பு  மீறி அவதூறுப் பரப்புரை செய்தனர்.  ஊழலை ஒழிக்க உறுதி ஏற்றவர்கள் 40 விழுக்காடு கமிஷன் ஆட்சி என்ற  அவப்பெயரில் மூழ்கிப் போனார்கள். இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது எனத் தொடங்கி, அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு ரத்து வரை  சிறுபான்மை மக்களுக்கு எதிரான  நடவடிக்கைகளை தீவிரமாக்கினர். ஆர்எஸ்எஸ். - பாஜகவின் வஞ்சக  சூழ்ச்சிகளை வாழ்க்கை அனுப வத்தில் உணர்ந்த கர்நாடக மக்கள்  வகுப்புவாத சக்திகளை அதி காரத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றி, படுதோல்வி அடை யச் செய்திருப்பதை வாழ்த்து கிறோம். அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு மாநில ஆட்சி பொறுப்புக்கு தேர்வு  செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் வகுப்பு வாத சக்திகளை முறியடிக்க, முனைப்பாக செயல்பட ஊக்கமளிக் கும் என்ற மகிழ்ச்சியோடு வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறோம்

எம்.எச்.ஜவாஹிருல்லா

முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வெறுப்பு அரசியலை கர்நாடகத்தில் வாழும் பெரும்பான்மையான இந்து மக்கள் புறந்தள்ளி உள்ளதாக மனித  நேய மக்கள் கட்சியின் தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா  தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடகாவில் இதுவரை நடைபெற்ற பாஜக ஆட்சி  ஊழல் நிறைந்ததாகத் திகழ்ந்தது. மக்கள் நலனில் கவனம் செலுத்தாத தனது ஊழல் மிகுந்த நிர்வாகத்தைத் திசைதிருப்பவே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாஜக அரசு மேற்கொண்டது. குஜராத்திற்கு அடுத்தபடியாக பாஜகவின் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளின் சோதனைக் கூடமாகக் கர்நாடக மாநிலத்தை பாஜக மாற்றியது. பிரதமர் மோடி யும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வும் கர்நாடக தேர்தலில் அதிதீவிர மாகப் பரப்புரை மேற்கொண்டார்கள். அந்த பரப்புரையிலும் முஸ்லிம் வெறுப்புத் தொனி பிரதிபலித்தது. முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வெறுப்பு அரசியலை கர்நாடகத்தில் வாழும் பெரும்பான்மையான இந்து மக்கள் புறந்தள்ளி உள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகை யில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 துரை வைகோ

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. நாடு முழு வதும் மத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும் ஆளும் பாஜக அரசுக்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி நாடு முழுவதும் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்று  மதிமுக தலைமை நிலைய செய லாளர் துரை வைகோ தெரிவித் துள்ளார். ஒன்றிய அரசின் பலம், கர்நாட காவில் ஆளும் கட்சி என்ற நிலை, ஆட்சி அதிகாரம் பண பலம் இவை அனைத்தும் இருந்தும் பாஜகவிற்கு கர்நாடகா மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர். ஒற்றுமையை வலி யுறுத்தி நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்ட சகோதரர் ராகுல்காந்தியின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி இது. 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட மாக கர்நாடகா தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.