கோஷ்யாரியையே ஆர்.என். ரவி மிஞ்சி விட்டார்: சஞ்சய் ராவத்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கை தவறு. அரசில் இருந்து ஒருவரை நீக்குவது முதல்-அமைச்சரின் உரிமை. மகாராஷ்டிராவிலும், நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன, ஆனால் அவரது ராஜினாமாவை அரசாங்கம் எடுக்கவில்லை. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடந்து கொண்ட விதம், பகத்சிங் கோஷ்யாரியை விட ஒரு படி மேலே இருப்பது போல் தெரிகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசியல் சட்டத்தை மீறுகிறது” என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் ரவிக்கு அரசியலமைப்பு பற்றி தெரியவில்லை: மணீஷ் திவாரி
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆளுநருக்கு அவரின் வரம்புகள் எதுவும் தெரியவில்லை. இதுபோன்ற அரசியல் அமைப்பு விதிகளை மீறும் செயல்களை ஆளுநர் செய்து இருக்கக் கூடாது. தனது பொறுப்புகள் என்னவென்றும் அரசியல் அமைப்பு பற்றியும் ஆளுநருக்குத் தெரியவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன” என்று ஒன்றிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணீஷ் திவாரி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மாற்றியமைக்கப்படும் உச்சநீதிமன்ற கொலீஜியம்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி ஆகியோர் கடந்த ஜூன் 17 அன்று ஓய்வுபெற்றனர். வெ. ராமசுப்பிரமணியன் ஜூன் 29 அன்று ஓய்வு பெற்றார். இம்மூன்று நீதிபதிகளும், டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் தவிர, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட், எஸ்.கே. கவுல் ஆகியோரும், ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் உச்சநீதிமன்ற கொலீஜியம் விரைவில் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் வாபஸ் பெறப்படவில்லை - அண்ணாமலை
தனக்கு அதிகாரமில்லை என்று தெரிந்தும், செந்தில் பாலாஜியை, அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி வியாழனன்று இரவு உத்தரவிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழவே, 5 மணிநேரத்தில், அந்த உத்தரவை அவரே நிறுத்தி வைப்பதாக அறிவித்து பின்வாங்கினார். இந்நிலையில், “செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக ஆளுநர் கூறவில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘மீசையில் ஒட்டவில்லை’ என்ற கதையாக சமாளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “அமைச்சரவையை முதலமைச்சர் சரியாக கையாள வில்லை” என்று வழக்கம்போல உளறிக் கொட்டியுள்ளார்.
ம.பி. முதல்வர், அமைச்சர்கள் மீதெல்லாம் நடவடிக்கை இல்லையா?
“அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள வழக்குகளில் அவர் இன்னும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது அவரது பதவி நீக்கம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சட்ட மேலவை உறுப்பினருமான நீரஜ் குமார் விமர்சித்துள்ளார். மேலும், “தமிழக அமைச்சர் பாஜகவுக்கு எதிரான கட்சி என்பதால் ஆளுநர் இந்த நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். வியாபம் ஊழல் விவகாரத்தில் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கும்போது ஏன் அத்தகைய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவில்லை” என்றும் நீரஜ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசாத் மீதான துப்பாக்கிச்சூடு ஒரு சாதியக் குற்றம் : பா. ரஞ்சித்
“சந்திரசேகர் ஆசாத் மீது பட்டப்பகலில் நடத்தப் பட்டுள்ள துப்பாக்கிச் சூடு, ஒரு சாதியக் குற்றம். தேசத்தில் நடக்கும் சாதிய அநீதிகளுக்கு எதிராக வலுவான குரலைக் கொடுத்து வந்த ஆசாத், ஒரு அம்பேத்கரிய சிந்தனைவாதி. அவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கிடப்பதென்பது, உ.பி. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதற்கு அடையாளம். உத்தரப் பிரதேச முதல்வர் இச்சம்பவத்தை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும். காவல்துறை ஆழமான விசாரணை நடத்த வேண்டும். சாதி வெறி பிடித்த துப்பாக்கி குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், “எனது சகோதரர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம் பற்றி 9 ஆண்டிற்குப் பிறகு பேசுவது ஏன்?
“பிரதமர் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்து கிறார். எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை தூண்டுவ தாகக் குற்றம் சாட்டுகிறார். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஏன் இதைக் கூறுகிறார்..? 2024 நெருங்குவதாலா? பிரதமரின் முன்மொழிவு எவ்வாறு பொதுவானதாகும்..?. அது இந்துக்கள், பழங்குடியினர், வடகிழக்கில் உள்ளவர்கள் அனைவரையும் உள்ளடக்கி உள்ளதா? ஒவ்வொரு நாளும் பிரதமரது (பாஜக) கட்சிக்காரர்களால் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க, இப்போது ஏன் இந்த கவலை?” என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொது சிவில் சட்டமா?; முதலில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு வாருங்கள்..
“எங்களைப் பொறுத்தவரை, பல்வேறு சமூகங் களின் கருத்துகளையும், தேவைகளையும் கேட்டறிந்த பின்னரே பொது சிவில் சட்டம் குறித்த எங்களின் நிலைப்பாட்டினை தெளிவாக விளக்கு வோம். அதற்கு முன்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவை களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வரு கிறது. பாஜகவால் அதிகாரம் இல்லாமல் வாழ முடியாது. அதைத்தான் 2019-ஆம் ஆண்டில் அஜித் பவாருடன் இணைந்து பாஜக செய்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதலில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு அங்கு அமைதியை நிலைநாட்ட எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தேசியவாத காங்கிஸ் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டினார்.
சுழற்சி முறை பற்றியெல்லாம் பேசவில்லை.. பாகேல்தான் முதல்வர்..
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இரண்டரை ஆண்டு சுழற்சி முறை அடிப்படையில், டி.எஸ். சிங் தியோவிற்கு, முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், “சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக தாங்கள் ஆலோசிக்கவில்லை; இது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட சலசலப்பு மட்டுமே ஆகும். பூபேஷ் பாகேலை முன்னிறுத்தித்தான் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வோம்” என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், தற்போது துணை முதல்வராக நியமிக்கப்பட்டு இருப்பவரு மான டிஎஸ் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரை நீக்குவதாக ஆளுநர் அறிவித்தது தவறு: பேரவைத் தலைவர்
திருநெல்வேலி,ஜூன் 30- செந்தில் பாலாஜியை அமைச்ச ரவை பதவியிலி ருந்து நீக்குவதாக அறிவித்தது தவறு என்றும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை எனவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய மு.அப்பாவு, அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு இடமில்லை. அதனைத் தெரிந்துகொண்டு ஆளுநர் தனது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளார். பெரும்பான்மைப் பெற்ற ஒருவரை முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ள கூறும் உரிமையைத் தவிர ஆளுநருக்கு வேறு அதிகாரமில்லை. ஆளுநரை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் பண்பானவர். ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடியவர். சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டு ஆளுநர் இத்தகைய அறிக்கை வெளியிட்டுள் ளார். தமிழகம் என்பார் பின்னர் தமிழ்நாடு என மாற்றி மீண்டும் அறிக்கை விடுவார். மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரை அதிகாரத்திலிருந்து நீக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?
சென்னை,ஜூன் 30- தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. தீபாவளிக்காக சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்வது வழக்கம். இதற்கென பண்டிகை நாட்க ளில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. நீண்டதூரம் பயணம் செய்ப வர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வருவதால் முன்ன தாக நவம்பர் 9 ஆம் தேதியே சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12 ஆம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள மக்களுக்கு ரயில்வே துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி கட்டணம் ரத்து
சென்னை,ஜூன் 30- பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மெத்தனால், எத்தனாலில் இயக்கப் படும் போக்குவரத்து வாகனங்க ளுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் தவிர 3,000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.