states

10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு ரத்து: வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை

சென்னை,மார்ச் 31- வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மர பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், கருணாநிதி கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள் ஒதுக் கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான  ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள்  முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து  நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழகத்தில் சமூகநீதி நிலை நாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில்,  தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்க ளுக்காக அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்ச நீதிமன்றத் தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முதல்வர் அறிவுறுத்திய படி, மூத்த வழக்கறிஞர் களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சி களையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற் கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது  தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட  வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து  தமிழக அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.