சென்னை, நவ. 17- அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரி யர்களுக்கு, ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்கு வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பி.பழனிவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் சமீபத்தில் அவசரக் கோலத்தில் நடை பெற்ற சில மாற்றங்களால் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணி யாற்றி வரும் ஆசிரியர்களுக்கும், ஊழி யர்களுக்கும் இதுவரை அக்டோபர் மாதத்திற்குரிய ஊதியம் வழங்கப்பட வில்லை. மாவட்ட கல்வி அலுவலகம் காலதாமதமாக ஊதியப் பட்டியலை அனுப்பி வைத்ததால் செப்டம்பர் மாத ஊதியம் கூட சிலருக்கு வழங் கப்படவில்லை. இந்த அவலநிலை உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால்தான் ஏற்பட்டது. அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்கி அதில் குளிர் காயும் ஒரு சில அதிகாரி களே இதற்கு காரணம் என்று ஆசிரி யர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 12 மாத ஊதியத்தில் ஒரு மாத ஊதியம் வருமான வரியாகபோய் விடுகிறது. மற்றும் ஒரு மாத ஊதியம் பங்களிப்பு ஓய்யவூதியதிற்கு (மாதம் 10 விழுக்காடு) போய் விடுகிறது. இதற்கு மேல் பணிக்கு சென்று வர போக்கு வரத்து செலவு, வீட்டு வாடகை, குழந் தைகளுக்கு கல்விச் செலவு, குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள் உள்ளன. இந்த வாரம் வெள்ளிக்கிழமைக் குள் (நவ. 18) ஊதியம் வழங்க வேண்டும் இல்லையேல் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆசிரியர்- அலுவலர்கள் தள்ளப்பட்டு இருக் கிறார்கள் என்பதை மிகுந்த வேதனை யோடு தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தமிழக அரசு இதில் உடனடி யாக தலையிட்டு இன்னும் காலத்தை நீடிக்காமல் உடனடியாக ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.