மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு அறிவிப்பு
விழுப்புரம்,ஜூன் 6- அரசு அதிகாரிகள் அறிவித்த தேதிக்குள் தலித் மக்களை மேல்பாதி கோவிலுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லை யெனில் கோவிலுக்குள் தலித் மக்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைத்துச் செல்லும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது. விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் தலித் இளைஞன் கதிரவன் என்பவர் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அரசு இந்துசமய அற நிலையத்துறைக்கு சொந்தமான திரௌபதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்பதற்காக சாதி ஆதிக்கச் சக்தியினரால் தாக்கப்பட்டார்.இதுசம்பந்தமாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 8-4-2023 அன்று சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தது. பின்னர் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் ஜூன் 6 அன்று மேல்பாதி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். ஜூன் 5 அன்று கடைக்கு பொருள் வாங்கச் சென்ற மாற்றுத் திறனாளியான சுந்தரமூர்த்தி என்கிற தலித் இளைஞரை இர்சனம்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன் என்பவருடன் சாதியவாதிகள் 4 பேர் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று கடுமை யாக தாக்கியதாக வலவனூர் காவல்நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது என்றும் அவர் மருந்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தங்களது கவலை, குமுறலை கிராம மக்கள் வெளிப்படுத்தினர்.அதே போல் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளான கதிரவனும் அவரது தாயார் கற்பகமும், தங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது என்று தெரிவித்தனர். மேற்படி கோவில் திருவிழாவில் தாக்கப்பட்ட கதிரவன், அவருடைய அம்மா மற்றும் கிராம மக்களை, மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, விழுப்புரம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஏ.சங்கரன், மாவட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.பால கிருஷ்ணன், சிஐடியு எம்.முருகன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அபிமன்னன் ஆகியோர் சந்தித்தனர். கிராம மக்களிடம் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பேசுகையில், ஜூன் 5 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது, அரசு அதிகாரிகள் 15 தினங்களுக்குள் தலித் மக்களை தாங்களே கோவிலுக்குள் அழைத்துச் செல்வ தாக உறுதி அளித்துள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குள் அரசு அழைத்துச் செல்ல வில்லை யெனில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெகு விரைவில் பட்டியல் சமூக மக்களை அழைத்துக் கொண்டு ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.