போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கிருஷ்ணகிரி, அக்.27- போச்சம்பள்ளியில் ஞாயிறன்று கூடிய வாரச்சந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்குக் குவிந்தது. தீபாவளியையொட்டி 5 மணி நேரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடந்து வரும் வாரச்சந்தைக்கு கிருஷ்ண கிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணா மலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் 5 ஆயிரம் ஆடுகளை விற் பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். வரும் வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கறிக்கடைக்காரர்கள் ஆடுகளை வாங்கக் குவிந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஒரு கிடாய் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையும், வெள்ளாடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரையும் விற்பனை யானதாகவும், ஞாயிறன்று கூடிய சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி
தருமபுரி, அக்.27- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியதால், 14 நாட் களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. எனினும், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை தற்போதும் நீடிக்கிறது. கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதி களான அஞ்செட்டி, நாட்டராம் பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இத னால், ஒகேனக்கல் மெயின் அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
தமிழகத்தில் நவ. 1 வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, அக்.27- தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வலுப் பெற்ற டாணா புயல் கரை யைக் கடந்தாலும், முழு வதுமாக வலுவிழக்காமல், நிலப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக நிலவுகிறது. இதனால், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. எனவே, தமிழகத்தில் ஞாயிறு முதல், நவம்பர் 1 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், அதன் பிறகே மழை பெய்வ தற்கான வாய்ப்புகள் அதிகரி க்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நக ரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள தாவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.
100 நாள் திட்டத்தை ஒழிக்க மோடி அரசு திட்டம்
“இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழ்மையான சமூகங்களின் உயிர்நாடியான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை (MGN REGA) உயிரியல் அல்லாத பிரதமரின் அர சாங்கம் ஒழிக்க முயற்சித்து வருகிறது” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “மோடி அரசாங்கம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒழிக்க நினைக்கிறது. பட்ஜெட் ஒதுக்கீடுகள் இடைவிடாமல் குறைக்கப்படுகின்றன. அதே போல ஊதிய விகிதங்கள் தேக்க மடைந்துள்ளன. இப்போது தொழில்நுட் பத்தை தவறாக நம்பியதன் மூலம் தொழி லாளர்கள் வேலை செய்யும் உரிமை மற்றும் நியாயமான ஊதியத்திற்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. மிகவும் கவலையளிக்கும் வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்க ளுக்கு இடையில் தேசிய வேலை வாய்ப்பு இன் கீழ் பதிவு செய்யப்பட்ட 84.8 லட்சம் தொழிலாளர்கள் பெயர்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழ்மை யான சமூகங்களின் “உயிர்நாடி” என்ப தால், இந்த திட்டத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தும் நடவடிக்கையை மோடி அரசு தொடங்க வேண்டும்” என அவர் கூறி னார்.
சபரிமலையில் தட்கல் முறையில் முன்பதிவு கேரள அரசு திட்டம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா வில் உள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. தொட ர்ந்து டிசம்பர் 26 அன்று மண்டல பூஜை யும், ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதை யடுத்து இந்த ஆண்டு பக்தர்களின் வரு கையை ஒழுங்குப்படுத்த புதிய ஏற்பாடு களுக்கு கேரள அரசு திட்டமிடப்பட்டுள் ளது. தற்போது உள்ள ஸ்பாட் புக்கிங் வசதிக்கு பதிலாக ரயில்வே முன்பதிவில் புழக்கத்தில் உள்ள தட்கல் முறையை அறிமுகப்படுத்த கேரள அரசு பரிசீலித்து வருகிறது. இந்தமுறை வெற்றி அடைந் தால் அடுத்த மண்டல சீசனில் இருந்து ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்ய வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல திங்கள் முதல் வியாழன் வரை பக் தர்கள் வருகை குறைவாக காணப்படும் நாட்களில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 65 பக்தர்களை கோவிலுக்குள் அனு மதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை களில் நிமிடத்துக்கு 80 பேர் அனுமதிக்க வும் கேரள அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 இடங்களில் துப்பாக்கி மோதல்
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டு காலம் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், சனியன்று இரவு இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக மணிப்பூர் காவல்துறை அதிகாரிகள் தக வல் தெரிவித்துள்ளனர். மேற்கு இம்பால் மாவட்டத்தின் கோட்ரூக் சிங் லேய்காய் கிராமத்தில் இருந்து சனியன்று இரவு 7 மணியளவில் அதிநவீன துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகள் மூலம் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு நிலைநிறுத்தப் பட்டிருந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால் லேய்காய் கிராமத்தில் நான்கு மணி நேரம் துப்பாக்கி மோதல் நீடித்தது. அதே போல பிஷ்ணுபூர் மாவட்டத் தின் மொய்ராங் காவல்நிலையத்துக்கு அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ள டிரோங்லவோபி கிராமத்தில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு தாக்குதல் சம்பவத்திலும் காயம், உயிர் சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படையைச் சேர்ந்த இரண்டு பேர் தெங்னவுபால் கிராமத்தில் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
7,979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் வரை ஊதியம் பள்ளிக்கல்வித் துறை அனுமதி
சென்னை,அக்.27- அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு 1 : 40 என்ற ஆசிரியர்: மாணவர் விகிதப்படி 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இரு முறை ஊதிய கொடுப்பாணை (செப்.30 வரை) வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நிகழாண்டு அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்து 7,979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.10.204 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதிய பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரம்பிய பாலாறு பொருந்தலாறு அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திண்டுக்கல், அக்.27- பழனி பகுதியில் தொடர் மழையால், வரதமாநதி, குதிரையாறு அணை நிரம்பி உள்ள நிலையில், பாலாறு-பொருந்தலாறு அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழனி சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் 65 அடி கொள்ளளவு கொண்ட அணையான பாலாறு-பொருந்தலாறு அணை சனியன்று 60.11 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், விநாடிக்கு 218 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில் இந்த அணையிலிருந்து சண்முக நதியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சண்முக நதி கரையோர பகுதி பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழையால் பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களிலும் 80 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வு பணி நீட்டிப்பு
சிவகங்கை.அக்.27- கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வுப்பணி அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ள னர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18 ஆம் தேதி தொடங்கியது. ஆணையர் சிவானந்தம் மேற்பார்வையில் கீழடி அகழாய்வு தள இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் மற்றும் தொல்லியல் மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். அகழாய்வில் ஒவ்வொரு நாளும் அரிய தொல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், செப்டம்பரில் நிறுத்தப்பட வேண்டிய அகழாய்வு பணி 2025 மார்ச் வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், 11 ஆம் கட்ட அகழாய்வு பணி மே 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தவெக மாநாட்டிற்குச் சென்ற இருவர் விபத்தில் பலி
சென்னை,அக்.27- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக் கிழமை (அக்.27) விக்கிர வாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடை பெற்றது. மாநாட்டில் பங்கேற் பதற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாக னத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலியானார். சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் மாநாட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். தேனா ம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார், மற்றொருவர் படு காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உசேன் பேட்டை அருகில் நிகழ்ந்த விபத்தில் மாநாட்டிற்கு வந்த காரில் பயணித்த தொண்டர் ஒருவர் பலியானார். இந்த விபத்தால் அந்தப் பகுதி யில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரான்ஸ் நூலக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு
சென்னை,அக்.27- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், தமிழ் நாட்டின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியப் பெருமக்களை அழைத்துக் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற் கொண்டுள்ளார்.அக்டோபர் 27 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான தேசிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பார்வையிட்டனர். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தமிழ், கிரேக்கம், அரபி போன்ற தொன்மையான மொழிகளின் 5000 ஓலைச் சுவடிகளைக் கொண்டுள்ள இந்நூலகம் நவீன தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. 2300-க்கும் அதிகமான பணியாளர் களின் உதவியுடன் செய லாற்றும் இந்நூலகம் பிரா ன்ஸ் நாட்டின் முக்கிய அடை யாளமாக பார்க்கப்படு கிறது. இந்த நூலகத்தின் நிர்வாக அலுவலர்களிடம் தமிழ்நாட்டின் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி எடுத்துரைத்து தமிழ்நாட்டிற்கு வருகைதரு மாறு அழைப்பு விடுத்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மணமேல்குடி அரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
அறந்தாங்கி, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசி ரியர் ஜீவானந்தம் தலைமை யில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்து லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் போதைப்பொ ருள் இல்லா தமிழ்நாடு, போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைத்தல், போதை பொருள் எதிர்ப்பு மன்றங் களை அமைத்தல், பள்ளி யில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந் தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு, உட்குழு அமைத்தல், பள்ளிக் கல்வித்துறை இலவச மைய அழைப்பு எண்.14417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண். 1098 போன்ற தகவல் கள் குழுவில் விவாதிக்கப் பட்டன. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சுகாதாரமாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் தான் காரணம்
துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, அக்.27- சென்னை சுகாதாரமாக இருப்ப தற்கு தூய்மை பணியாளர்கள் தான் காரணம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை திருவிக நகர் தொகு திக்கு உட்பட்ட புளியந்தோப்பு தனி யார் தொழில் கல்லூரியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 1,500 தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் கழிவுநீரகற்று வாரிய ஊழியர் களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். அப்போது அவர் பேசுகையில், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன். சென்ற ஆண்டு சென்னையில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. நாங்கள் களத்தில் இருந்ததற்கு நீங்கள் தான் எங்களுக்கு துணையாக இருந்தீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு சென்னையில் தண்ணீர் நிற்கவில்லை. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆற்றிய பணிகளால் எளிதில் சென்னை மீண்டு வந்துள்ளது. சென்னை மக்களுக்கு ஒரு தாய் போல இருந்து பணியாற்றுகிறீர்கள். எந்த மழையையும் எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது என நாங்கள் தைரியமாகக் கூற நீங்கள் தான் காரணம். அடுத்த மழைக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன். சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.