states

பாஜகவை வீழ்த்த கட்சிகளின் கூட்டணி அல்ல; கொள்கைவாதிகளின் கூட்டணி தேவை!

பிரசாந்த் கிஷோர் பேட்டி

பாட்னா, மார்ச் 21-  எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்துவதால் பாஜகவை வீழ்த்திவிட முடியாது; கொள் கைவாதிகளின் கூட்டணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பிர சாந்த் கிஷோர் கூறியிருப்பதா வது: “எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது, ஒரு முகப்புத்தகத்தை  போன்றது. வெறும் கட்சிகளை யும் தலைவர்களையும் ஒன்றி ணைப்பதால் மட்டும் அது சாத் தியப்படாது. எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு சவால் விட வேண்  டும் என்றால் அதன் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவம், தேசியவாதம் மற்றும் நலத்திட்டங்கள் ஆகி யவை பாஜகவின் 3 தூண்கள்.  இந்த மூன்றில் 2 நிலைகளையா வது எதிர்க்கட்சிகள் கடக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உங்களால் பாஜகவுக்கு சவால்விட முடி யாது. இந்துத்துவத்தை எதிர்த்து போராடுவதற்கு கொள்கை வாதிகளின் கூட்டணி வேண்டும். காந்தியவாதிகள், அம்பேத்கரி யர்கள், சோசலிஸ்டுகள், கம்யூ னிஸ்டுகள் ஆகியோர் ஒன்று சேர வேண்டும். கொள்கை என்  பது மிகவும் முக்கியம். அதே நேரம் கொள்கை என்ற பெய ரால் கண்மூடித்தனமாக செயல்  படக்கூடாது.

ஊடகங்களில் எதிர்க்கட்சி களின் தலைவர்கள் ஒன்றிணை வதை பார்க்கிறோம். யார்  யாரோடு மதிய உணவு சாப்பிடு கிறார்கள். தேநீர் குடிக்க யாரை  அழைக்கிறார்கள் என்பதை கொள்கையின் உருவாக்கமாக பார்க்கிறேன்.  கொள்கை ரீதியான கூட்  டணி அமையாத வரை, பாஜக வை வீழ்த்துவதற்கு வேறு வழியே கிடையாது. நான்  மகாத்மா காந்தியின் கொள்கை யை பின்பற்றுபவன். பீகாரில், நான் மேற்கொள்ளும் ‘ஜன் சூரஜ் யாத்திரை’, காந்தியின் சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மாநிலத்தில் புதிய அரசியல்  சூழலை உருவாக்குவேன். எனது யாத்திரை பீகாரின் இலக்  குகளையும் அதன் மீதான மதிப்பீடுகளையும் மாற்றும். பீகார் சாதி ரீதியிலான அரசி யல் உட்பட பல்வேறு தவறான காரணங்களால் மட்டுமே அறி யப்படுகிறது.  காங்கிரஸை மறுகட்ட மைப்பு செய்ய நான் விரும்பி னேன். ஆனால், தேர்தலில் வெற்றிபெறுவதே காந்தி குடும்பத்தின் குறிக்கோள். எனது யோசனைகளை அவர்  கள் விரும்பும் வழியில் செயல்  படுத்த நான் ஒப்புக்கொள்ள வில்லை.  இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.