சென்னை, மே 10- எல்ஐசியின் தெற்கு மண்டலத்தின் (தமிழ்நாடு, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமானபாண்டிச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய) மண்டல மேலாளராக ஜி.வெங்கடரமணன் மே 3ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 1989ஆம் ஆண்டு நேரடி ஆட்சேர்ப்பு அதிகாரியாக எல்ஐசியில் சேர்ந்தார். மண்டல மேலாளராக (பொறுப்பு) உயர்த்தப்படு வதற்கு முன்பு, அவர் தெற்கு மண்டலத்தின் மண்டல மேலாளராக (மார்க்கெட்டிங்) இருந்தார். முன்னதாக, அவர் பிராந்திய மேலாளர், தெற்கு மண்டலம், செயலர் (மார்க்கெட்டிங்), மத்திய அலுவலகம் மற்றும் கோழிக்கோடு மற்றும் சென்னை I பிரிவுகளின் மூத்த கோட்ட மேலாளராக இருந்தார். அவர் எல்ஐசி ஃபிஜி கிளையில் மேலாளராக வெளிநாட்டுப் பணியையும் மேற்கொண்டுள்ளார்.