ஒன்றிய அரசின் சட்டத்துறை முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தில்லியில் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்ப தாவது: பாரதிய நியாய சம்ஹிதா மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. பிரிட் டிஷ் ஆட்சிக் காலச் சட்டங்களை நீக்கு வதாகக் கூறும் பாஜக அரசு, இந்தப் புதிய சட்டங்கள் மூலம் நாட்டில் சர்வாதி காரத்தைத் திணிக்க விரும்புகிறது. இந்தச் சட்டங்கள் மூலம் உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், அரசுப் பணியாளர்கள், தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) உள் ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நட வடிக்கை எடுக்க முடியும். இதுகுறித்து நீதிபதிகள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். இந்த மசோதாக்கள் சட்டமாக நிறை வேறினால், எதிர்காலத்தில் நாடு பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். பிஎன்எஸ் மசோதாவின் பிரிவுகள் 254, 255, 257 உள்ளிட்டவை அரசு அதிகாரி களைப் பயமுறுத்துவதாக உள்ளன. ஆங்கிலேயர்கள்கூட இத்தகைய முறை களைக் கையாளவில்லை.