சென்னை, மே 13- ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள கோடை, குறுவை, முன் சம்பா பருவத்திற்குத் தேவையான மொத்த உரத் தேவையில் 43 விழுக்காடு உரம் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண்மைக்கு அதிக முக்கியத் துவம் அளித்துவரும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, கோடை மழை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்க ளிலும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிக்கும் அதிகமாக உள்ளதால், நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைப் போலவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. தமிழ்நாட்டில் நடப்புக் கோடைப் பருவம், குறுவை நெல் சாகுபடி மற்றும் இதர வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களுக்குத் தேவையான ரசாயன உரத் தேவையை முன் கூட்டியே கணக்கிட்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருப்பு வைக்க வேளாண் துறை உரிய நட வடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள காரிப் பரு வத்திற்கு, 4,23,000 டன் யூரியா, 1,45,000 டன் டிஏபி, 1,20,000 டன் பொட்டாஷ், 3,00,000 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 50,000 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 10,38,000 டன் உரங்கள் தேவைப்படு கிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் உரத்துறையுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தேவையான உரங்களைப் பெற்று, இருப்பு வைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, 12.5.2023 நிலவரப்படி, 1,66,311 டன் யூரியா, 71,580 டன் டிஏபி, 12,528 டன் பொட்டாஷ், 1,86,011 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 19,138 டன் சூப்பர் பாஸ்பேட் என மொத்தம் 4,55,568 டன் உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள கோடை, குறுவை, முன்சம்பாப் பருவத்திற்குத் தேவையான மொத்த உரத் தேவையில் 43 விழுக்காடு உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில் 39 விழுக்காடும், டிஏபி தேவையில் 50 விழுக்காடும், காம்ப்ளக்ஸ் தேவையில் 60 விழுக்காடும், சூப்பர் பாஸ்பேட் தேவையில் 38 விழுக்காடும் இருப்பு உள்ளது. பொட்டாஷ் உரத்தை பொறுத்த வரை, வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான பொட்டாஷ் உரம் நியூ மங்களூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப் படுகிறது. அதுமட்டுமல்லாது, மே மாதம் 3ஆம் வாரத்திற்குள் 43,000 டன் இறக்குமதி பொட்டாஷ் உரத்தை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதில் கூறப் பட்டுள்ளது.