states

உப்பு இருக்கிறது.. புளி இருக்கிறது; சரி.. பில் இருக்கிறதா? அண்ணாமலைக்கு, ஆனந்த் சீனிவாசன் கிடுக்கிப் பிடி

சென்னை, டிச.21- தன்னை ஆடு மேய்க்கும் விவசாயி என்று கூறிக் கொள்ளும் பாஜக தலைவர் கே.  அண்ணாமலை அணிந்துள்ள 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் தயாரிப்பு ‘பெல்  அண்ட் ராஸ்’ (bell and ross) வாட்ச் விவாத மாக மாறியுள்ளது. சொந்தப் பணத்தில் தான் இந்த வாட்ச்-சை அண்ணாமலை வாங்கினார் என்றால், அதற்கான பில்லை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஏப்ரல் மாதம் ஆதாரங்களை வெளி யிடுகிறேன் என்று அண்ணாமலை டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலை வாங்கிய வாட்சி-ற்கான பில் தொலைந்து விட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அதனை விற்ற நிறுவனத்திடம் கேட்டால் தந்துவிடப் போகிறார்கள்.. இதற்கு எதற்கு ஏப்ரல் மாதம் காத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரும், பொருளாதார  நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது: இப்போ ஒரு வேடிக்கையான வீடியோ பார்த்தேன். அண்ணாமலை ரபேல் வாட்சை  பற்றி பேசி இருக்கிறார். நாங்க கேட்பது  சின்ன விஷயம். நீங்கள் காசு கொடுத்து  வாங்கி இருந்தீர்கள் என்றால் பில்லை  காட்டுங்கள். சுங்க வரி கட்டி இருக்கிறீர்களா?  இறக்குமதி வரி கட்டி இருக்கிறீர்களா? அதை  காட்டுங்கள். ஜிஎஸ்டி கட்டி இருக்கிறீர்களா? எந்த ஊரில்.. எங்கே வாங்கினீர்கள்? இதை  சொல்ல முடியாதா? 

அண்ணாமலை அவர்களே உங்களிடம் பில் மிஸ் ஆகிவிட்டது என்றே வைத்துக் கொண்டாலும், நீங்கள் வாங்கிய நிறு வனத்திடம் கேட்கலாம். 500 வாட்ச்- தானே  விற்றார்கள். பில்லை கேட்டால் கொடுக்கப் போகிறார்கள். அதை விட்டுவிட்டு நீங்கள் தேசியவாதியா.. தேச விரோதியா என்று நாங்கள் கேட்கவில்லை. நீங்கள் வாட்சை எப்படி வாங்கினீர்கள்? 4 லட்சம் வாட்ச் கட்டும் அளவிற்கு வருமானம் ஏது?  உங்களிடம் பில் இல்லை என்றால் உங்க ளுக்கு வாட்சை இலவசமாக கொடுத்தது யார்? இதைச் சொல்வதில் என்ன பிரச்சனை? எதற்காக ஏப்ரல் மாதத்தில் பில்லை காட்டுவேன் என்கிறீர்கள். இப்போ தும் அந்த வாட்சைத்தானே கையில் கட்டி யிருக்கிறீர்கள். பில்லை மட்டும் ஏப்ரல் மாதம் கொடுப்பேன்.. மே மாதம் கொடுப் பேன் என்று குடுகுடு பாண்டி போல பேசு வது ஏன்?  சீனாவிற்கு பதிலடி கொடுப்போம்.. அது செய்வோம்.. இது செய்வோம் என்கி றீர்கள்.. ஆனால் உங்கள் தலைவர் ‘C’  என்ற வார்த்தையை சொல்லவே பயப்படு கிறார். சீனா என்ற வார்த்தையை சொல்  லவே அஞ்சுகிறார். சீனா என்ற அந்த வார்த்தையையே அவரால் சொல்ல முடிய வில்லை. கல்வானில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அப்போது சீன ராணுவம் இந்தியா உள்ளேயே வரவில்லை என்று தானே நீங்கள் சொன்னீர்கள்? அப்போது நீங்கள்  சீனாவை எதிர்த்து பேசினீர்களா? அப்போது பேசாமல் இப்போது வாட்ச் விவகாரத்தில் தேசபக்தியை இழுப்பது என்ன பேச்சு? சும்மா உப்பு இருக்கிறது.. புளி இருக்கி றது என்றெல்லாம் பேசாதீர்கள்.. பில் இருக்கிறதா?. இவ்வாறு ஆனந்த் சீனிவாசன் கேட்டுள்ளார்.