இராமநாதபுரம்,அக்.27- கச்சத்தீவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை ஒரு விசைப்படகு டன் இலங்கை கடற்படையினர் வியாழக் கிழமையன்று கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம், இராமேசு வரத்தில் இருந்து புதன்கிழமையன்று 400- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதில், தங்கச்சிமடம் அடுத்துள்ள நாலுபனை கிராமத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவரது விசைப் படகை சிறைப்பிடித்தனர். படகில் இருந்த கிளிண்டன் (31),பேதுரு (24), வினிஸ்டன் (50), தயான் (44), தானி (24),ஆனஸ்ட்(24) ஆகிய 7 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத் திற்கு அழைத்துச் சென்றனர். விசார ணைக்கு பின் நீதியியல் துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
படகை பறி முதல் செய்த அதிகாரிகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைக்க உள்ளதாக இலங்கை நீரியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இராமேசுவரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரைக் கண்டித்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மீன வர் சங்கம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பாக அவசர கூட்டம் மீனவ சங்கத் தலைவர் சகாயம் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் இராமேசு வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரி விக்கப்பட்டது. படகை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது, அன்றைய தினம் தங்கச்சிமடம் வலசை தெரு பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.