ஆலந்தூர்,ஏப்.26- இலங்கை கடற்படை யால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட னர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரத்தை சோந்த மீனவர்கள் பாலு, ரங்கதுரை, தரங்கம்பாடியை சேர்ந்த பாலுமணி, காரைக்காலைச் சேர்ந்த திலீபன் ஆகிய 4 பேர் கடந்த மார்ச் மாதம் இந்திய கடல் எல்லை பகுதி யில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது சிறைபிடிக் கப்பட்டனர்.