சென்னை, நவ. 13- தமிழகத்தில் ஞாயிறன்று 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ள தாக தீயணைப்புத்துறை தெரி வித்துள்ளது. நாடு முழுவதும் பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பட்டாசு வெடித்த தில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்க ளும் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஞாயிறன்று 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப் புத்துறை தெரிவித்துள்ளது. பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக 254 இடங்களில் இருந்து அழைப்பு வந்தததாகவும் 110 இடங்களில் மற்ற வகை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தீபாவளி நாளில் மொத்தம் 102 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 9 இடங்களில் மற்ற வகை தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துகளில் 38 பேர் தீக்கா யம் அடைந்த நிலையில் 9 பேர் மட்டும் தற்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் 9 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். 7 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் தீக்காயம் அடைந்த 2 பேர் உள் நோயாளிகளாகவும், 15 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர் தீக்காயத்தால் அனு மதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 5 பேர் லேசான தீக்காயங் களுடன் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில், கொளத்தூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு, பெரியமேடு பகுதியில் உள்ள கடை, வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.