சென்னை,ஜூன் 30- மீன்பிடி தொழிற்சார்ந்த வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- சுற்றுலாவை மையப் படுத்தி சென்னை எண்ணூர் முதல் கோவளம் வரையிலுள்ள கடற்கரை பகுதியில் சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு பெறு தல் திட்டத்தை தமிழ்நாடு அரசு ரூ. 100 கோடி மதிப்பில் அறிவித்துள்ளது. அதற் கென கம்பெனி சட்டத்தின் கீழ் தனி நிறுவனம் ஏற்படுத் தப்பட்டு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதி யில் பூங்காக்கள் அமைப் பது, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை சிமெண்ட் சாலை அமைத்து விரிவாக்கம் செய்வது, பட்டினப்பாக்கத்தில் வணிக வளாகம் அமைப்பது, சீனி வாசபுரம் முதல் கொட்டி வாக்கம் வரை ரோப் கார் வசதி ஏற்படுத்துவது, அங்கி ருந்து கோவளம் வரை பூங்காக்கள் அமைப்பது, சுற்றுலா பயணிகள் அமர் வதற்கான இருக்கைகள் அமைப்பது என திட்ட மிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மையப்படுத் திய மேற்படி திட்டத்தினால் பரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் தண்டையார் பேட் டையிலுள்ள சிங்காரவேலர் சிந்தனை கழகத்தில் ஜூன் 29 அன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப் பின் மாநில துணைச் செய லாளர் ஆர்.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென் சென்னை, வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர். சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார், கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, மாநில பொருளாளர் எஸ்.ஜெய சங்கரன், மாநில நிர்வாகி நிந்தியானந்தம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ெஜ.அன்புரோஸ், எஸ்.பரம சிவன் பங்கேற்றனர்.
மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
இக் கூட்டத்தில், ஒன்றிய -மாநில அரசுகள் மீன்பிடி தொழிற்சார்ந்த வாழ்விடங் களை பாதுகாக்க வலி யுறுத்தியும், சென்னை நொச்சிக்குப்பம் முதல் கோவளம் வரை மீனவ மக்களை சந்தித்து பிரச்சார இயக்கம் ஜூலை இறுதி வாரத்தில் நடத்துவது என முடிவெடிக்கப்பட்டது. சென்னை கடற்கரை மறுசீரமைப்பு திட்டம் குறித்து மீனவ கிராம பிரதி நிதிகள், மீனவர் சங்கங்களு டன் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மீன்பிடி தொழிலையும், கடலோரத்தை சார்ந்துள்ள பாரம்பரிய மீனவர்களின் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த வேண்டும். மீன் வியாபாரம் செய் வோரை அப்புறப்படுத்தக் கூடாது. நவீன மீன் அங்காடி களை அவர்கள் தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே அமைத்துத் தர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 ன்படி மீனவர்கள் வாழ்விடங்கள், மீன்பிடிக் கும் பகுதிகள், வலைகள், படகுகள் பாதுகாத்து வைக்கும் இடங்கள், வலை காய வைக்கும் இடங்கள், சமூகநலக்கூடங்கள், கோயில்கள் பற்றி கடலோர மண்டல மேலாண்மை மண்டல வரைபடத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மீனவர்களின் குடியிருப்பு தேவையை கருத்தில் கொண்டு நீண்ட கால அடிப்படையில் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். நொச்சிக்குப்பத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவர்க ளுக்கு உடனடியாக ஒதுக் கீடு செய்துதர வேண்டும். டுமிங்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையுள்ள மீனவ குடியிருப்புகள் மிக வும் மோசமான நிலையில் உள்ளன. அந்த மக்களுக்கு அந்தந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் விரைந்து கட்டப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டது.