சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் விவசாயிகள் சங்கம், நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்து இடம்பெயர்ந்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள மக்களின் அமைப்பான ஏக்தா சங்கம் மற்றும் பிற அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. செப்டம்பர் 21 அன்று மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையின் கீழ் போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகள் மீதும் பேச்சுவார்த்தை நடத்த தென்கிழக்கு நிலக்கரி வயல் மேலாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.