கடந்த மே மாதம் 19 அன்று ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், கேஒய்சி மற்றும் இதர முறையான ஆவ ணங்களைக் கொண்டு வரம்பு இல்லாமல் தனது வங்கிக் கணக்கு களில் டெபாசிட் செய்து செப்டம்பர் 30 வரை மாற்றிக் கொள்ள லாம் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின் படி ரூ.2,000 நோட்டு களை மாற்றுவதற்கு சனியன்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 7 அன்று வரை அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் புழக்கத்திலி ருந்த 93 சதவிகித ரூ.2000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக செப்.1ல் ஆர்.பி.ஐ. அறிவித்தது.