states

img

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த மே மாதம் 19 அன்று ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப்  பெறுவதாகவும், கேஒய்சி மற்றும்  இதர முறையான ஆவ ணங்களைக் கொண்டு  வரம்பு இல்லாமல் தனது வங்கிக் கணக்கு களில் டெபாசிட் செய்து  செப்டம்பர் 30 வரை மாற்றிக் கொள்ள லாம் என ரிசர்வ் வங்கி  அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின் படி ரூ.2,000 நோட்டு களை மாற்றுவதற்கு சனியன்றுடன் கால  அவகாசம் நிறைவடைந்த நிலையில்,  அக்டோபர் 7 அன்று வரை  அவகாசத்தை  நீட்டித்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. நாட்டில் புழக்கத்திலி ருந்த 93 சதவிகித ரூ.2000 தாள்கள்  திரும்பப் பெறப்பட்டதாக செப்.1ல் ஆர்.பி.ஐ. அறிவித்தது.