சென்னை, ஏப்.18- மாமேதை காரல் மார்க்சின் உருவச் சிலையை தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநகரத்தில் நிறுவிட வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் வருமாறு: இந்த நூற்றாண்டு பிறந்தபோது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையா ளர் யார் என்று பிபிசி நடத்திய கருத்துக் கணிப்பில் உலகம் முழுவதும் உள்ளவர் களால் தேர்வு செய்யப்பட்டவர் மாமேதை காரல் மார்க்ஸ். உலகை வியாக்கியானம் செய்தவர்கள் மத்தியில் ,மாற்றுவதே கடமை என்பதை வலியுறுத்திய முதல் மனிதர். எல்லாவிதமான ஏற்றத்தாழ்வு களில் இருந்தும்,சுரண்டலில் இருந்தும், ஒடுக்குமுறைகளில் இருந்தும் மனித சமூகம் முழுவதையும் விடுவிப்பதற்கான அறிவாயுதத்தை வழங்கிய மகத்தான மனிதன் காரல் மார்க்ஸ். காரல் மார்க் ஸோடு முரண்பட்டவர்கள் இருக்கலாம். ஆனால், யாராலும் மறுதலிக்க முடியாத மாபெரும் சிந்தனையாளராக அவர் விளங்குகிறார். அல்லல்பட்டு ஆற்றாது அழும் ஒவ்வொரு மனிதனுக்குமான நம்பிக்கை கீற்றை விதைத்த பேராசான் தோழர் காரல் மார்க்ஸ்.
இதன் காரண மாகவே தோழர் ஏங்கல்ஸோடு இணைந்து மார்க்ஸ் தீட்டிய கம்யூனிஸ்ட் அறிக்கை யை கடந்த நூற்றாண்டின் துவக்கத்தி லேயே தந்தை பெரியார், தனது குடியரசு இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழில் கம்யூனிஸ்ட் அறிக்கை முதன் முத லில் வெளியானது குடியரசு இதழில் தான். இன்று இந்திய மக்களுக்குள்ளேயே கூட பகைமையை, மோதலை, வெறுப்பை விதைக்கும் சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் உலகத் தொழிலா ளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டு மென்கிற அறைகூவல் வேறு எந்த காலத் தையும் விட இன்று முக்கியத்துவமும், பொருத்தப்பாடும் உள்ளதாக மாறியிருக்கி றது. எனவே, மாமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்களை என்றென்றும் நினைவு கூரும் வகையில் தமிழ்நாட்டின் தலைநக ரில் பொருத்தமான ஒரு இடத்தில் அவ ருக்கு அரசின் சார்பில் சிலை ஒன்றை நிறுவி பெருமை சேர்க்க வேண்டுமென முதல மைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மட்டுமின்றி, எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளுக்கும், ஒடுக்குமுறை களுக்கும், சுரண்டல்களுக்கும் முடிவு கட்ட வேண்டுமென்று கருதுகிற மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.