தூத்துக்குடி, செப்.10- தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5535 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட புளியமரத்து அரசரடி பகுதி யில் மின்கம்பங்கள் 4, நீர்தேக்க தொட்டி 1, பொது சுவர் 3 என 8 இடங்களிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச் செந்தூர் காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட காயாமொழி, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி, முக்கலணி மேலூர் ஆகிய பகுதிகளில் 72 மின்கம்பங்களிலும், திருவைகுண்டம் உட்கோட்டத்தில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ நட்டார்குளம், மேல நட்டார்குளம், முத்தாலங்குறிச்சி, குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட மறந்தலை, ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி காலனி ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் 72, மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 2, நீர்தேக்க தொட்டி 1 என 75 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூப்பன்பட்டி, கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட் பட்ட தெற்கு கழுகுமலை ஆகிய பகுதி களில் மின்கம்பங்கள் 61, நீர்தேக்க தொட்டி 2, தெருக்குழாய்கள் 4, பொது சுவர் 4, பாலம் 1 என 72 இடங்கள் உட்பட மொத்தம் 227 இடங்களில் ஊர்த் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் சாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மொத்தம் 5535 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரி வித்துள்ளார்.