கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் ஆணையம் தகவல். வனத்துறையினரின் தகவலின்படி தற்போது தமிழ்நாட்டில் 264 புலிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என 5 இடங்களில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு தேசிய அளவில் 6 ஆவது இடத்தில் உள்ளது. 44 புலிகள் சரணாலயத்திலும், மற்ற புலிகள் வெளியிடங்களிலும் இறந்ததாக கூறப்படுகிறது.