சென்னை,ஏப்.25- ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; தமிழ்நாடு முழுவதும் பாசன ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரிட தமிழ்நாடு அரசு சுமார் 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை சாகுபடியை காலத்தோடு துவங்கு வதற்கான சூழல் உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேல் உள்ளது. ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். கடந்தாண்டு முன்கூட்டியே மே 24 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதுபோல் ஒரு நிலை உள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை துவக்கிட வேண்டும். ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரிட போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாசன ஆறுகளில் பழுதடைந்து ள்ள ஷட்டர்கள், மதகுகளை செப்பனிட வேண்டும். தூர்வாரிடும் பணிகள் நடைபெறும் இடங்களில் அந்தந்த பகுதி விவசாயி களைக் கொண்ட கண்காணிப்பு குழுக் களை அமைத்து முறைகேடுகள் இல்லா மல் பணிகள் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு கண்காணித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.