states

மகளிர் உரிமைத் தொகைக்கு யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம்: அரசு எச்சரிக்கை

சென்னை, செப்.15- தமிழ்நாடு மக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வெள்ளிக்கிழமை (செப்.15) தொடங்கப்பட்டது. அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சி புரத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கையேடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிருக்கு  தொகையை கையாள்வது குறித்து கையேடு  வழங்கப்பட்டது. அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய  வேண்டாம் என்றும் பொன் மகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகை ஏடிஎம் அட்டை, கடவு சொல் (பாஸ்வார்டு) வேறு யாருடனும் பகிர வேண்டாம் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளில் ஏடிஎம் விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் வங்கிகளில் இருந்து கேட்பதாக கூறி ஓடிபி அல்லது வங்கி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அனைவருக்கும் பணத்தை செலுத்த முடியாது என்பதால் தகுதியான பயனாளிகள் சிலருக்கு ஒரு நாள் முன்ன தாக செப்.14 அன்று  ரூ.1000 பணம் வரவு  வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப் பட்டு 5 நாட்களில், அதாவது செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். குறுஞ்செய்தி  இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை  திட்டம் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது  நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான எஸ்.எம்.எஸ் வரும் 18 ஆம் தேதி முதல் அனுப்பி  வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்யலாம் மேலும் விண்ணப்பம் ஏற்கப்படாத சூழலில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்  பெறப்பட்ட 30 நாட்களுக்கு இணைய சேவை  வாயிலாக கோட்டாட்சியருக்கு விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.