states

வெம்பக்கோட்டையில் முழு இரும்புடன் கூடிய தக்களி கண்டெடுப்பு

சிவகாசி, மே 25- சிவகாசி அருகே வெம்பக் கோட்டை விஜய கரிசல்குளம் இரண்  டாம் கட்ட அகழாய்வில் முழு இரும்பு டன் கூடிய சுடு மண்ணால் ஆன தக்  களி கண்டெடுக்கப்பட்டது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டை விஜய கரி சல்குளத்தில் இரண்டாம் கட்ட அக ழாய்வில் 1192  பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடு மண்ணால் ஆன தக்களி கண்டெ டுக்கப்பட்டது. இது முழுமையான இரும்புடன் இணைக்கப்பட்டுள்ளது.  அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், முதல் கட்ட அகழாய்வில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட அக ழாய்விலும் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. முதல் கட்ட அகழாய்வில் தக்களி கிடைத்த நிலையில், தற்போது இரண் டாம் கட்ட அகழாய்வில் முழு இரும்புடன் கூடிய சுடுமண்ணால் ஆன தக்களி கிடைத்துள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் தொழி லில் ஈடுபட்டுள்ளது தெரிய வரு கிறது என்று கூறினார்.