states

வங்கதேச உள்நாட்டு பிரச்சனையை மதப்பிரச்சனையாக மாற்ற விஎச்பி முயற்சி

டாக்கா,நவ.28- வங்கதேசத்தில் சில நாட்களுக்கு முன் கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (ISKCON) உறுப்பினராகவும்,  ஆன்மீகத் தலைவராகவும் இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசியக் கொடியை அவமதித்தார் என வங்கதேச தேசியக் கட்சியின் (பிஎன்பி) முன்னாள் தலைவர் ஃபிரோஸ் கான் அளித்த புகாரின் பேரில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து உள்நாட்டு நிலைமைகள் மிக மோசமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக சிட்டகாங் என்ற முக்கியமான துறைமுக நகரத்தில் பெரும் கலவரங்கள் வெடித்துள்ளன.  இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்துத்துவா கும்பல்களுக்கு பண உதவி செய்கிற மற்றும் மத பிரிவினைவாதத்தை தூண்டுகிற அமெ ரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பிஏ) அமைப்பின் தலைவர் அஜய் ஷா மற்றும் பொதுச் செயலாளர் அமிதாப் மிட்டல் ஆகி யோர் வங்கதேச பிரச்சனையை இந்து முஸ்லிம் மதப்பிரச்சனையாக மட்டும் சித்த ரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். “ஹிந்துஸ் ஃபார் அமெரிக்கா பஸ்ட்” என்ற அமைப்பின் நிறுவனர் உத்சவ் சந்துஜா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்பிற்கு சீனாவுடன் இணக்கமாக உள்ள வங்கதேசத்துக்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்த வேண்டும், வங்க தேச ஆடை இறக்குமதி மீது அதிக வரி விதிக்க வேண்டும் என கடிதம் எழுதி யுள்ளார். மேலும் சில வங்கதேச அதிகாரி கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் எனவும் இது அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் எனவும் கதை கட்டியுள்ளனர்.  

வங்கதேசத்தில் மாணவர்கள் எழுச்சி யை தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.  அதன் பிறகு அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.  வங்கதேசத்தில் புத்தம், கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிறு பான்மை மக்கள்  வசித்து வருகின்றனர். ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளி யேறிய பிறகு நாடுமுழுவதும் சுமார்  50 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட தாக்கு தல்களை சிறுபான்மையினர் எதிர்கொண் டுள்ளனர். சிறுபான்மையினர் மீதான  தாக்கு தல்கள் இடைக்கால அரசு பதவி ஏற்ற பிறகு குறையாமல் அதிகரித்து வருகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி பறிக்கப்பட்ட போதே வங்கதேச அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினர், மாணவர் எழுச்சி இயக்கங்களில் ஈடுபட்ட மாணவர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த சில குழுக்களின் வழிகாட்டுதலில் செயல்படும் அமைப்புகள் மூலம் சீர்குலைவு  பணிகளுக்கான தீவிரப் பயிற்சி பெற்றனர் என்ற குற்றச்சாட்டை  முன்வைத் தனர். வாசகர் வட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றம் பற்றிய பயிற்சி அவர்கள் பெற்றனர் என பேராசிரியர் நசுமுல் ஆஷான் கலிமுல்லா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். தெற்காசியாவில் குறிப்பாக தென்சீன கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வும், தெற்காசிய நாடுகளை சீனாவுடனான பொருளாதார உறவுகளில் இருந்து வெளி யேற்றவும் அந்நாடுகள் மூலம் சீனாவை முடக்கவும் அமெரிக்க பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது. இதனடிப்படையில் பல்வேறு அமெரிக்க சார்பு குழுக்கள் அந்நாட்டில் சீர்குலைவுகள் ஏற்படுத்தி வருகின்றன.  இந்த சீர்குலைவுகளை முகமது யூனுஸ் தலைமையிலான அரசால் கட்டுப்படுத்த முடியவில்லையா அல்லது கட்டுப்படுத்த மறுக்கிறதா என்ற கேள்விகளை பலர் எழுப்பி வருகின்றனர்.