சென்னை, பிப். 18- விழுப்புரம் அன்பு ஜோதி இல்ல வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி இல்ல ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டி ருந்த முதியோர்கள் அடித்து துன் புறுத்தப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டதாகவும் பல புகார்கள் வெளியாகின. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை காணவில்லை என அவரது மகன் அண்மையில் புகார் கொடுக்க காப் பகத்தினர் சரியான பதில் அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. ஜப ருல்லாவை மீட்டுத் தரக் கோரி நீதிமன்றத்தில் அவரது மகன் ஆட் கொணர்வு மனு அளித்துள்ளார். அதன்படி அதிகாரிகளும் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, ஆசிரமத் துக்கு சீல் வைக்கப்பட்டது. ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உட்பட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து ஆசிர மத்தில் தங்க வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்பு கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வரும் நாட்களில் சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் விவரங்கள் அனைத்தை யும் பெற்று, விசாரணையை தொடங் குவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.