உத்தரப்பிரதேச மாநிலம் மண்டோலா பகுதி யில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தில்லியில் தீவிர மின்தடை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2 நாட்களுக்கு முன் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சாமி என்ற இளைஞர் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், செவ்வாயன்று நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புவ னேஸ்வரத்தில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மோகன் சரண் மஜி தேர்வு செய்யப் பட்டார்.
“புதிதாக அமைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர வையில் ஒரு முஸ்லிம் முகம் கூட இல்லை. இது உலக அளவில் நாட்டின் நற்பெய ருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் எனக் கூறக்கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியைக் கொண் டுள்ள ஒரு பிரிவினரை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைப்பது நாட்டின் மரியாதையை பாதிக்கும்” என உத்தரகண்ட் முன்னாள் முதல்வ ரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கப்பூர்வமான அரசி யலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசிய லை செய்யப்போவதில்லை” என ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
“இந்தியா கூட்டணியிடம் 236 எம்.பி.க்கள் உள்ளனர். அதனால் மசோதாக்களை புல்டோசர் செய்யவோ, எதிர்க்கட்சிகளை மிரட்ட வோ, சஸ்பெண்ட் செய்யவோ முடியாதபடி நாடாளு மன்றத்தின் செயல்பாடு இருக்கும். தேசிய ஜன நாயக கூட்டணி அரசாங்கம் முழு காலத்திற்கு நீடிக்காது” என காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறினார்.
காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் மக்க ளவைத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று 50 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை பந்த யத்தில் கட்டி தோற்றுப்போனவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.