states

ஊதிய உயர்வு பிரச்சனைகளில் தலையிடுக!

அவிநாசி, ஜன. 3- விசைத்தறி தொழி லாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனைகளில் தமிழக அரசு உடனடி யாக தலையிட்டு தீர்வு  காண முன்வர வேண்டும்  என சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின்  மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய சிஐடியு அலுவலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எம். சந்திரன், மாநில பொருளாளர் எம்.  அசோகன் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் விசைத்தறி தொழில் பெரும் நெருக்கடியில் உள்ளது.  இந்நிலையில் தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியது இத்தொழில் அழியும் நிலைக்கு தள்ளப் படும். எனவே திமுக அரசு உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளால் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தொழிலாளர்க ளுக்கு மாத ஊதியம் ரூ.26  ஆயிரம் மற்றும் ஓய்வூதி யம் ரூ. 10 ஆயிரம் வழங்க  வேண்டும்.

தொழிலாளர்க ளுக்கு இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மோடி அரசின் தொழி லாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து ஏப்ரல் 5 அன்று  தில்லியில் நடத்தும் போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களைப் பெருமளவு பங்கேற்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடிந்து 21 மாதங்களாகியும், இது வரையில் பேசி முடிக்கா மல் உள்ளது. தென்காசி மாவட்டம் சுப்புலாபுரம் பகுதியில் கூலி உயர்வு  கேட்டு கடிதம் அனுப்பியுள்ள னர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் கூலி உயர்வு கேட்டு வேலை  நிறுத்தம் துவங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், தளவாய் புறம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளனர். சங்கரன்கோவி லில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட 10 விழுக்காடு கூலி உயர்வை  அமல்ப டுத்தக் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. எனவே, மாநில அரசும் தொழிலா ளர் துறையும் இந்த மாவட்டங்களில் தொழிலா ளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனைகளை உடனடி யாக தலையிட்டுத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.