ஈயாடிய தில்லி பாஜக தலைமை அலுவலகம்
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னணியில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் தொண்டர்களின் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டங்கள் களைகட்டின. அதேநேரம், தில்லி தீன் தயாள் உபாத்யாய் பகுதியில் அமைந்து இருக்கும் பாஜக தலைமை யகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுவாக நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல் களின்போது பாஜக தலைமையகமானது, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தொண்டர்கள் புடைசூழ விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், சனிக்கிழமையன்று காலை பாஜக தலைவர்கள் தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
பாஜக அலுவலகத்தில் புகுந்த பாம்பு
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சனிக் கிழமை காலை ஷிக்கோனில் உள்ள பாஜக அலு வலகத்துக்கு வருகை தந்தார். அங்கிருந்த தலை வர்கள் மற்றும் தொண்டர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த அலுவல கத்துக்குள் ஒரு நாகப்பாம்பு நுழைந்தது. உடனடி யாக மீட்புப் படையினரை வரவழைத்த பாஜக வினர், அவர்கள் மூலம் பாம்பைப் பிடித்து பாது காப்பான இடத்தில் விட்டனர். முன்னதாக அலுவல கத்திற்கு வரும் வழியில், காங்கிரசாரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்குள் பசவராஜ் பொம்மை மாட்டிக் கொண்டார். ஒருவழியாக அங்கிருந்த வந்தவரை, பாம்பு பயமுறுத்தி விட்டது.
34 ஆண்டுகளில் கிடைக்காத வெற்றி
கடந்த 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் (43.76 சதவிகித வாக்குகளுடன்) வெற்றி பெற்றிருந்தது. 1989-க்கு பிறகு எந்தக் கட்சிக்கும் 132 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கவில்லை. 1994 தேர்தலில் மதச் சார்பற்ற ஜனதாதளம் 33.54 சதவிகித வாக்கு களுடன் 115 இடங்களிலும், 1999-இல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 40.84 சதவிகித வாக்கு களுடன் 132 இடங்களிலும் வென்றிருந்தன. இந் நிலையில், 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காங்கிரஸ் கட்சி 43.1 சதவிகித வாக்குகளுடன் 136 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்க ளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை களை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அந்த வகை யில், தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் பெங்க ளூருவுக்கு வரவேண்டும் என்றும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆறில் நான்கு மண்டலங்களில் பாஜகவுக்கு அடி
பெங்களூரு, மே 13- கர்நாடக மாநிலமானது, மைசூரு, பெங்க ளூரு, மத்திய கர்நாடகா, கடலோரக் கர்நாடகா, ஹைதராபாத் ஒட்டிய கர்நாடகா, வட கர்நாடகா என 6 மண்டலங்களாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. இதில், நான்கு மண்டலங்க ளில் காங்கிரஸ் கட்சி அதிகமான தொகுதிக ளைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 2 மண்ட லங்களில் மட்டுமே பெரும்பான்மை இடங்க ளைப் பெற்றுள்ளது. மைசூரு பகுதியில் மொத்தமுள்ள 61 தொகுதிகளில் காங்கிரஸ் 39 இடங்களைப் பெற்ற நிலையில், பாஜக-வுக்கு வெறும் 6 இடங்களே கிடைத்துள்ளன. இங்கு மதச்சார் பற்ற ஜனதாதளத்திற்கு 14 இடங்கள் கிடைத் துள்ளன. மற்றவர்களுக்கு 2 இடங்கள் கிடைத் துள்ளன. பெங்களூரு மண்டலத்தில் மொத்த முள்ள 28 தொகுதிகளில் பாஜக 15 இடங்க ளைப் பிடித்துள்ள நிலையில், காங்கிரசும் 13 இடங்களைப் கைப்பற்றியுள்ளது.
மத்திய கர்நாடகாவில் 25 தொகுதிகளில் 19 தொகு திகளை காங்கிரஸ் அள்ளியிருக்கிறது. 5 இடங் கள் பாஜகவுக்கும், ஓரிடம் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் கிடைத்துள்ளன. கடலோர கர் நாடகத்திலுள்ள 19 தொகுதிகளில் 13 தொகு திகளை பாஜக கைப்பற்றிய நிலையில், காங் கிரஸ் 6 தொகுதிகளை வென்றுள்ளது. ஹைதராபாத்தை ஒட்டிய கர்நாடகப் பகுதியில் 41 தொகுதிகள் இருக்கும் நிலை யில், இங்கு 26 தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜகவுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதேபோல மும்பையை ஒட்டிய வட கர்நாடகத்திலும் 50 இடங்களில் 33 இடங்களை காங்கிரஸ் அள்ளி யிருக்கிறது. இங்கு பாஜகவுக்கு 16 இடங்கள் கிடைத்துள்ளன. மைசூரு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளையும், சாம்ராஜ் நகர், குடகு மாவட்டங்களில் அனைத்து தொகு திகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. கோட்டையான பெல்லாரி தொகுதியில் 3-ஆவது இடத்திற்குப் போன பாஜக பாஜக-வின் கோட்டை என கூறப்படும் பெல்லாரி நகர் தொகுதியில், பாஜக வேட்பா ளர் ஜி. சோமசேகர ரெட்டி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் நரபரத் ரெட்டி வெற்றிபெற்ற நிலை யில், இரண்டாவது இடத்தை, சுரங்க முதலாளி யான ஜனார்த்தன ரெட்டியின் மனைவி கலி லட்சுமி அருணா 2-வது இடம்பிடித்தார்.
பாசிஸ்டுகளின் வீழ்ச்சி துவக்கம்: உதய நிதி ஸ்டாலின்
சென்னை,மே 13- “கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரி யக்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக் கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கூறியுள்ளார். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கி லிருந்து தொடங்கியுள்ளது எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி
சென்னை, மே 13- தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்ச ரூபாய் நிவார னம் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக் குளம் வட்டம், புதூர் குறுவட்டம், சிவலார்பட்டி கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்ப வரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) சுதன் (7) ஆகியோர் வெள்ளிக்கிழமை (மே 12) சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை யடைந்தேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தர விட்டுள்ளார்.
மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறார் தப்பி ஓட்டம்
ஆவடி,மே 13- ஆவடி அடுத்த திருமுல்லை வாயல் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் தமிழக அரசு சமூக பாது காப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற ‘லைப் லைன்’ என்னும் போதை மறு வாழ்வு சிறார் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப் பழக்கத்திற்கு அடி மையான சிறுவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு 13 சிறார்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த மணலி, கொருக்குப்பேட்டை, எம்.கே.பி. நகர், விருகம்பாக்கம், சர்மா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதி களில் இருந்து வந்து தங்கி இருந்த 7 சிறுவர்கள் வியாழனன்று மையத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படு கிறது. தப்பி ஓடிய 7 பேரில் 5 சிறுவர் களை வெள்ளியன்று அவர்களின் குடும்பத்தார் மீண்டும் அழைத்துவந்து மறுவாழ்வு மையத்திற்கு சேர்த்து விட்டனர். இந்நிலையில் மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வரு கின்றனர்.