states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தொடர்ந்து 6-வது நாளாக  தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் சர்வர் செய லிழந்துள்ளதால் அவசர கால நோயாளி பராமரிப்பு சேவைகள், வெளி நோயாளிகள், உள்நோ யாளிகள், ஆய்வக பிரிவு கள் கைமுறையாக நிர்வகி க்கப்படும் அவலம் உரு வாகியுள்ளது. 
  2. செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர் சிதம்பர சாமி கோவில் குளத்தில் முகேஷ் (18), உதய குமார் (19) மற்றும் விஜய்  (18) ஆகிய 3 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவ ரது உடலையும் தீயணை ப்புத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பிவைத்தனர்.
  3. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாபட்டினத் தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் சென்ற 4 படகு களையும் இலங்கை கடற் படை பறிமுதல்செய்தது.
  4. மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் சுற்றுலா  விசாவில் சட்டவிரோத மாக பணிபுரிந்த 17 பேர்  (10 பெண்கள், 7 ஆண்கள்) மீது தஹிசார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் யாரையும் கைது செய்ய வில்லை என டிஎஸ்பி ஸ்மிதா பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.
  5. மேகாலயாவில் மூன்று  எம்எல்ஏக்கள் திடீர் ராஜி னாமா செய்துள்ளனர். இதில் 2 பேர் ஆளும் என்பிபி கட்சியையும், ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள். ராஜி னாமா கடிதங்கள் சபாநா யகரிடம் கொடுக்கப் பட்டுள்ளதாக சட்டமன்ற அதிகாரி தகவல் தெரி வித்துள்ள நிலையில், மூவரும் அடுத்த மாதம் பாஜகவில் சேரவுள்ள தாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.
  6. தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒய்எஸ் ஆர்டிபி தலைவர் ஷர்மிளா ரெட்டியின் கான்வாய் மற்றும் அக்கட்சியின் பிரச்சாரப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைக்க முயன்றனர். ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகனின் சகோதரர் தொடங்கிய கட்சியின்  பெயர்தான் ஒய்எஸ் ஆர்டிபி ஆகும். இந்த கட்சி தெலுங்கானா பகுதி யை கவனிக்கிறது.
  7. காசோலை மோசடி வழக்கில் நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் ஆகியோருக்கு சைதாப்பேட்டை நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
  8. அமெரிக்க வரலாற்றி லேயே இதுவரை இல் லாத வகையில் நடப்பு ஆண்டில் பறவை காய்ச்ச லுக்கு 5 கோடியே 5 லட்ச த்து 40 பறவைகள் உயிரிழ ந்ததாக அமெரிக்காவின் வேளாண்துறை அறி க்கை வெளியிட்டுள்ளது. 
  9. கர்நாடகா மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறு வனத்தில் (MIT) மாணவர்  ஒருவரை தீவிரவாதி என்று கூறிய பேராசிரியர் இடைநீக்கம். விசாரணை க்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.