என்.ஜே.ஜானி பெயரில் பிரதமருக்கு கொலை மிரட்டல்?
திருவனந்தபுரம், ஏப்.22- பிரதமர் நரேந்திர மோடிக்கு கலூரைச் சேர்ந்த என்.ஜே. ஜானி என்பவர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. ஆனால் அந்த கடி தத்தை அனுப்பியது தான் இல்லை என்று ஜானி கூறி யுள்ளார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணையை தொடங்கியுள்ளனர். பாஜக மாநிலக் குழு அலு வலக முகவரிக்கு ஒரு வாரத் துக்கு முன்பு கடிதம் வந்த தாகக் கூறி அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன், மாநில காவல் துறை தலைவரிடம் கடி தத்தை ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் வருகையையொட்டி கடிதத்தை காவல்துறை யினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 2 இல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
சென்னை,ஏப்.22- தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் மே 2 அன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் அமைச்சரவைக் கூட்டம் வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பட்ஜெட்டில் வெளியான திட்டங்களை நடைமுறைப்படுத்து வது மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
அமலாக்கத்துறை தலைவரா அண்ணாமலை? அமைச்சர் கேள்வி
சென்னை,ஏப்.22- தமிழ்நாடு மின் வாரியத்தில் முறைகேடு நடப்பதாக அண்ணா மலை தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். அப்போது, “தவறு நடந்து இருந் தால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என்கிறார். இவர் என்ன அந்த துறைக்கு தலைவரா? அமலாக்கத்துறை தனித்து இயங்கும் அமைப்பு. அதை இவர்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை, ஏப். 22- தங்கம் விலையில் கடந்த ஒரு வாரமாக சற்று ஏற்றமும் இறக்கமும் காணப்பட்ட நிலையில் அட்சய திருதியையை முன்னிட்டு விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,605-க்கும், ஒரு சவரன் ரூ.44,840-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 90 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.80.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெறுக
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
சென்னை, ஏப். 22- தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறை வேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.சுனில்குமார், பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பது உலகத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையாகும். அந்த உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேர வையில் தொழிலாளர் விரோத மசோதாவை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்காது. இதனை முறியடிக்கும் வரை எதிர்த்துப் போராடும் என்பது உறுதி. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை எந்தவித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் ஒரு திருத்தம் மூலமாக தமிழ் நாடு அரசு பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு முற்றிலும் பாதகமான இந்த சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
ஒரே நாளில் 42.37 கோடி யூனிட் மின் நுகர்வு
சென்னை,ஏப்.22- தமிழ்நாடு வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் அதிகபட்ச மாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2.67 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகா வாட் ஆகும். இதில் விவசாயத்தின் பங்கு 2,500 மெகா வாட். பொதுவாக கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகா வாட் மற்றும் குளிர் காலத்தில் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகி றது. இதனால், வீடுகளில் ஏசி, மின் விசிறி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட் என்ற அளவைத் தாண்டி விட்டது. மேலும், விவசாயப் பிரிவில் கூடுத லாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்தப் பிரிவில்மட்டும் மின்சாரப் பயன்பாடு கூடுதலாக 727 மெகா வாட் அதிகரித் துள்ளது. இத்தகைய காரணங்க ளால், கடந்த மாதம் 4-ம் தேதி தினசரி மின்தேவை முதல் முறையாக 17,584 மெகா வாட்டாக அதிகரித்தது. இதன்படி தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில்அதிகபட்ச மாக 42.37 கோடி யூனிட்மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை,ஏப்.22- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர் பாக அத்திட்டத்தின் ஒருங்கிணைப் பாளர் இளம் பகவத் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதியில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக் காக செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 2023-24 ஆம் கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களின் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், தொடக்க கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட் டோர் இத்திட்டத்தை செயல்படுத்து வார்கள் என கூறப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டார அளவில், ஓர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்று நரை முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கண்காணிப்பு பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
புதிதாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள்!
டோக்கியோ, ஏப்.22- தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதி யத்தை 1,500 யென் ஆக நிர்ணயித்தால் இன்னும் கூடுதலாக 10 லட்சம் வேலை களை உருவாக்க முடியும் என்று ஜப்பா னின் தேசிய தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியம் பற்றி இந்தக் கூட்டமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஜப்பானில் தற்போது தற்காலிக ஊழியர்களையும் சேர்த்து 2 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஒரு மணிநேரத்திற்கு 1,500 யென்னுக்கும் குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானின் மொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரமாகும். நாடு முழுவதும் சமச்சீராக ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்சத்தை 1,500 யென்னாக உயர்த்தினால் உள்ளூர் உற் பத்தியை மேலும் 17 லட்சம் கோடி யென் மதிப்பிற்கு அதிகப்படுத்த முடியும் என்று தொழிற்சங்கத்தின் ஆய்வில் நிபு ணர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலமாக ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 விழுக்காடு உயர்வு இருக்கும். கூடுதலாக 10 லட்சத்து 66 ஆயிரம் வேலைகளை அதிகமாக உரு வாக்க முடியும். வாங்கும் சக்தி அதிகரிப்பதோடு, அந்த அதிகரிப்புக்கு ஏற்றவாறு பொருட்களின் இருப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டியிருக்கும். அதனால் உற்பத்தி அதிகரிக்கும். அதிகமான பொருட்கள் விற்பனையாகும் வாய்ப்பு உருவாகும். இந்த உற்பத்தி மற்றும் விற்பனை அதிக ரிப்பதால், ஜப்பானின் தேசிய மற்றும் மாகாண அரசுகளுக்கு வரிவருவாயும் கூடு தலாகக் கிடைக்கும் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.