states

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

அக்டோபர் 2-ம் தேதி விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்த தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஆளுநருக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த எந்த அருகதையும் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் இறுதிவரையில் எந்த பங்கையும் ஆர்எஸ்எஸ் செலுத்தவில்லை என்பது மட்டுமல்லாமல், இவ்வமைப்பின் தலைவர் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து, பிரிட்டிஷாருக்கு விசுவாசமாய் இருப்போம் என உறுதியளித்தவர். அத்தகைய அமைப்பின் பிரச்சாரகராக உள்ள ஆளுநர் விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த எந்த அருகதையும் கிடையாது.