சென்னை,ஜூன் 21- வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் கொதிகலன் குழாய்க ளில் ஏற்பட்ட கசிவு காரணமாக 1100 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு மற்றும் வல்லூர் ஆகிய பகுதிகளில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதில், அத்திப் பட்டு வடசென்னை அனல்மின்நிலை யத்தில் உள்ள 5 அலகுகளில் தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. இங்குள்ள 2 ஆவது நிலை யில் உள்ள 1 ஆவது அலகில் கொதி கலன் குழாயில் கசிவு ஏற்பட்டு பழுதா னது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 3 ஆவது அலகில் உள்ள கொதி கலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரண மாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரு அனல் மின் நிலையங்களில் கொதிகலன்களில் பழுது ஏற்பட்டதால் 1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.