அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டதில் முறைகேடு புகார்
மதுரை, ஜன.4- முறைகேடு புகாரால் கடந்த அதிமுக ஆட்சி யில் ஆவின் நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட 236 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து, பால்வளத்துறை ஆணையர் அதிரடி உத்தர விட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டில் ஆவி னில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்த தாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பால் வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்தார். இதுதொடர்பான விசா ரணைக்கு ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. விசாரணையில் 6 மாவட்ட பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 47 பேர், திருச்சியில் 40 பேர், தேனியில் 38 பேர், திருப்பூரில் 26 பேர், விருது நகரில் 26 பேர், நாமக்கல்லில் 16 பேர், தஞ்சாவூ ரில் 8 பேர் என்று மொத்தம் 236 பேரின் பணி நிய மனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு துணையாக இருந்த 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை ஆவினில் கடந்த 2020 மற்றும் 2021ல் மேலாளர், எக்ஸிகியூடிவ் உட்பட 61 பணி யிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டன. இதில் தகுதியற்ற வர்களுக்கு பணி வழங்கியது, எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் வெளியானது, காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார் எழுந்தன. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் அளிக் கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை குழு இரு முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. ஆவின் துணைப் பதிவாளர் கணேசன் தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவ ணங்கள் கிடைத்தன. பின்னர் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை கண்கா ணிப்பாளர் எஸ்.பி., தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு ஆவினில் பணி நியமன ஆணை பெற்ற 17பேரிடம் பணி நியமன உத்தரவு, கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து வகை அசல் சான்றிதழ்கள், ஆவ ணங்களை விசாரணை அதிகாரிகள் பெற்று விசாரணை நடத்தினர். இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு இதுதொடர்பான அறிக்கை ஆவின் பால்வளத்துறை ஆணையருக்கு தாக் கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஆண்டுகளில் நிய மிக்கப்பட்ட மேலாளர் (தீவனம்), மேலாளர் (எம்.ஐ.எஸ்.,) மேலாளர் (பொறியியல்), முது நிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டென்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் நியமனங் களை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81 இன் கீழ் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்போதைய ஆவின் மேலாளர் (நிர்வாகம்) மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தகுதியானவர்களும் பாதிப்பு
47 பேரின் திடீர் பணி நீக்க உத்தரவால் ஆவி னில் பணியாளர்கள் தட்டுப்பாட்டால் பணிகள் முடங்கியுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வர்களில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளாகி பணி உறுதி செய்யப்படவுள்ள நிலையில் ஆவின் நிர்வாகம் நடவடிக்கையால் தகுதியின் அடிப்ப டையில் தேர்வானவர்களும் பாதிக்கப்பட்டுள் ளதாகவும், ரத்து ஆணையில் உரிய விளக்கம் இன்றி உள்ளதாகவும் தகுதி அடிப்படையில் பணியில் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பணி யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3 மாவட்டங்களில் நிர்வாகக்குழு கலைப்பு
விருதுநகர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 6 அதிகாரிகளிடமி ருந்து ரூ.2,47,900 அபராதம் வசூல் செய்யவும், திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்க ளின் நிர்வாகக் குழுவை கலைத்தும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் அதிரடி உத்த ரவிட்டுள்ளார்.