states

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

சென்னை,ஜூலை 6- தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப் படுமா என்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல  மாதங்கள் கழித்து செவ்வாயன்று(ஜூலை 5) கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம்  அடைந்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு  பிறப்பிக்கப்படுமா? என்பது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா தினசரி பரிசோதனைகளில் 10 விழுக்காட்டிற்கும் மேல்  தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது 40 விழுக்காட்டிற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசிய மாகும்” என்றார். தமிழ்நாட்டில் தற்போது வரைக்கும் 2662 பேர்  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்தாலும் கூட மருத்துவ சிகிச்சையில் இருப்ப வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. எனவே தற்போதைய நிலையில் ஊரடங் கிற்கு அவசியம் இல்லை. ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.