ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க கோரி கடலூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பாக சனிக்கிழமை (அக்.21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் டி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ஆர். ஆர். ஜீவானந்தம், சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல். ஹரி கிருஷ்ணன், கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் வி. கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஏ. பாபு உள்ளிட்டோர் பேசினர்