states

பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிவகாசி, ஜன.24 - சிவகாசி அருகே கனஞ்சாம் பட்டியில்   மாயக்கண்ணன் என் பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 19 ஆம் தேதி  ஏற்பட்ட வெடி விபத்தில்  முனீஸ் வரி,  சங்கர் ஆகிய இரு தொழி லாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும்  16 பேர் படுகாயமடைந்தனர். இதில்  மாரிமுத்து, கருப்பசாமி ஆகியோர் கடந்த ஜனவரி 21 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் என்ற தொழிலாளியும்  உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.