states

கொல்லம்-சென்னை ரயில் விபத்தில் இருந்து தப்பியது

திருநெல்வேலி, ஜூன் 5- கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது.  வழக்கம் போல் இந்த ரயில் கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. ரயிலானது செங் கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரயில் நிலையத்துக்குள் நுழை வதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்கா ணித்தனர். அப்போது அந்த ரயி லின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத் தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்க ளுக்கு மதுரை ரயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வ தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமத மாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்- செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத் தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டு பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. ஒடிசா மாநிலத்தில் கோர ரயில்விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டை யில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.