states

விழுப்புரம் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை-மனித உரிமை மீறல்கள்

சென்னை,பிப்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:                 விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்டு பல மாநி லங்களிலிருந்து 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ள தும், பலர் மர்மமான முறையில் காணா மல் போயுள்ளதும் பெரும் அதிர்ச்சியை யும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜோதி ஆசிரமம் உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனு மதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யா தவர்களை சங்கிலியால் அடித்து சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது  உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல் களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் - சிறுமிகளை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்முறைகளும் செய்துள்ளனர். இங்கு தங்கியிருந்த 16க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.

இதில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு  ஜபாருல்லா என்பவரை (45 வயது)  ஆசிரமத்தில் சேர்த்து விட்டுள்ளார். ஓராண்டு கழித்து அவரை பார்க்கச் சென்ற போது மேற்படி நபரை காண வில்லை. இதுகுறித்து உயர்நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்குப் பிறகு ஆசிர மத்தைச் சேர்ந்த 4 பேர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இதுபோன்று காணாமல் போயுள்ளவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பலர் நீதிமன்றத்தை நாடாமலே உள்ளனர். 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த கருணை இல்லத்தில் பல மன நோயாளிகள், முதியவர்கள் சித்ர வதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்திய பின்னணியில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனையானது.  எனவே, இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாலியல் வன்முறைகள் குறித்தும், காணாமல் போயுள்ளவர் கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒரு  சிறப்பு விசாரணை அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்ற வாளிகள் கைது செய்யப்படவேண்டும்.  தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசி ரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படு கின்றனவா என்பது குறித்து ஆராய் வதற்கு ஒரு சிறப்புக்குழுவை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி முறைப்படுத்திட வேண்டும்.