states

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களின் பணிநீக்கத்தை ரத்து செய்திடுக!

சென்னை, ஜன.3- கொரோனா காலத்தில் பணியாற்றிய  செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்  நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் ஜனவரி  2 அன்று சென்னையில் மாநிலச் செயற்குழு  உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருத்துவப் பணியாளர்  தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த 2400 செவிலியர்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த  முறையில் பணியமர்த்தப்பட்டனர். கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்ததில் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியும், தன்னலமற்ற சேவையும் பிர தான காரணமாகும். இப்பணியினை தமிழக  மக்களும், ஜனநாயக இயக்கங்களும், அமைப்பு களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எம்.ஆர்.பி. தேர்வு எழுதி  மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு  பின்பற்றப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 2400  செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,  தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறி விப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர  தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறி வித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். கொரோனா காலத்தில் தங்களது உயிரை யும் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் செவிலியர்களின் பங்கும் முக்கியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டு மெனவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவர்களின்  கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க!

தமிழ்நாடு அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு  வெளியிட்ட அரசாணை எண் 354/2009இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதி யம் தொடர்ந்து அதிமுக ஆட்சியின் போதும் உயர்த்தப்படாமல்  நீடித்துக் கொண்டுள் ளது. அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு  அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும், மருத்துவர்கள் பல் வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலை யிலும் முந்தைய அதிமுக அரசு எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு புறக்கணித்து வந்தது.  தமிழகம் மருத்துவத்துறையில் முன்  னோடி மாநிலமாக திகழ்வதற்கு மருத்துவர் களின் அளப்பரிய சேவையும், உழைப்பும் மிக முக்கிய காரணமாகும். தனியார் மருத்து வமனைகள் மருத்துவத்தை  லாபமீட்டும் தொழிலாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வரும்  சூழலில், அரசு மருத்துவர்கள் வருவாய் நோக்கமின்றி  கிராமப்புறங்களுக்குச் சென்று ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த முறையில்  மருத்துவ சேவை வழங்கி வருவது குறிப்பி டத்தக்கது. அதே சமயம், அவர்களின் நியாய மான கோரிக்கை இதுவரை நிறைவேற்றப் படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாது அரசு மருத்துவர்களுக்கு அர சாணை எண் 354 இன் படி உரிய ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.  கொரோனா காலத்தில்  உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பங்  களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண் டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.