மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 14) சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் தொடங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், பெ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.