கும்பகோணம், ஏப்.4 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி மணப்படையூரைச் சேர்ந்தவர் சோமு. இவரது மகன் ஹரிஹரன். இவர் எஸ்விகே மினி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தஞ்சை - விக்கிர வாண்டி நெடுஞ்சாலை பணிக்காக ஒப்பந்தம் செய்து உள்ள பட்டேல் நிறுவனத்தின் லாரி ஓட்டுநர் ஒருவருக்கும், மினி பேருந்தை ஓட்டி வந்த ஹரிஹரனுக்கும் வழித் தடங்களில் ஹெட்லைட்டை அணைக்காமல் வேகமாக வந்ததால், சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பட்டேல் நிறுவனத்தின் ஓட்டுநர் சுவாமிமலை காவல் நிலையத்தில் மினி பேருந்து ஓட்டுநர் ஹரிஹரன் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்டு சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி, சிறப்பு ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஸ்ரீதர், ஏட்டு உமாபதி ஆகியோர் ஹரிஹரன் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று, அவரை அடித்து காவல் நிலைய லாக்கப்பில் வைத்து மேலும் அடித்துள்ளனர். மறுநாள் காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு, ‘காவல்துறை அடித்ததை வெளியில் சொல்லக் கூடாது என்றும், வலி தெரியாமல் இருப்பதற்கு மருந்து தடவி விட்டும்’ நீதிபதி முன் ஆஜர் படுத்தியுள்ளனர். அதன் பின் திருவிடைமருதூர் சிறை யில் அடைக்கப்பட்டு திருச்சியில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறை அடித்ததால் ஹரிஹரன் திடீரென்று ரத்த வாந்தி எடுத்துள்ளார். கும்பகோணம், தஞ்சை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று பின்னர், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி சிகிச்சை பல னின்றி ஹரிஹரன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. காவல்துறை மீது சந்தேகம் அடைந்த உறவினர்கள், சடலத்தை சாலையில் வைத்து சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 12 மணி வரை, ஹரிஹரனை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஆனாலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்து வக் குழு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததன் பேரில் கும்பகோணம் மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்றது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தெரிவிக்கை யில், போக்குவரத்து வழியில் சாதாரண ஓட்டுனர் பிரச்சனையை சுமூகமாக தீர்க்காமல் ஒரு தரப்பின ருக்கு சாதகமாக சுவாமிமலை காவல்துறையினர் செயல் பட்டுள்ளனர். மேலும் சட்டத்தை மீறி ஹரிஹரனை காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கியுள்ளது உறவினர்க ளிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காவல்துறை யினரின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. சுவாமிமலை காவல்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றியச் செயலாளர் ஜே.ஜேசுதாஸ், மாநகராட்சி உறுப்பி னர் செல்வம், தமிழ் விடுதலை புலிகள் நிறுவனர் குடந்தை அரசன் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.