states

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.21- கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக் குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனு மதிக்கலாமா என்பது தொடர்பான கருத் துக்களுடன், நவம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனு மதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தர விடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்  குமார் முன்பு திங்களன்று (நவ. 21) மீண்  டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி  முழுமையான அளவில் எல்.கே.ஜி முதல் அனைத்து வகுப்புகளை துவங்கத் தயா ராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்  யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்  டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்து களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டி யுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துகளுடன் நவம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தர விட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.